states

img

சிபிஐ விசாரணை என்ற பெயரில் பிரச்சனையை திசைத்திருப்ப முயற்சி!

புதுதில்லி, ஜூன் 5 - ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமான உண்மையான பிரச்சனைகளை திசைத்திருப்பவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதா? என்று மோடி அரசுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி யுள்ளது. ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தை அடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு 4 பக்க கடிதம் எழுதி இருக்கிறார். அதில் இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்து. இந்த விபத்தால் நாடு அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த துயரமான தருணத்தில் நாடு ஒன்றுபட்டு நின்றாலும், ஏராளமான உயிர்கள் பறிபோனதை இழப்பீடு  மூலமோ, ஆறுதல் வார்த்தைகள் மூலமோ சரி செய்துவிட முடியாது. போக்குவரத்துத் துறையில் புரட்சிகர மாற்றங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், சாமானிய இந்திய மக்களின் முக்கிய வாகன மாக ரயில்வேதான் திகழ்கிறது. இந்தியன் ரயில்வே நம்பகமானது அல்ல; ஆனால் மலிவானது. 

ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை எண்ணிக்கை எவ்வளவோ,  அந்த அளவுக்கு மக்கள் இந்தியாவில் நாள் தோறும் ரயிலில் பயணிக்கிறார்கள். அவ்வாறி ருக்கையில், ரயில்வேயின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான் தற்போது மிகவும் முக்கியம்; வெறுமனே மேம்போக்கான மாற்றங்கள் அல்ல. இந்திய ரயில்வே அதிக செயல்பாடு கொண்டதாகவும், அதிக நவீனமானதாகவும், அதிகத் திறன் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியன் ரயில்வே மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுகிறது. தொடர்ந்து தவறான முடிவுகள் எடுக்கப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு பாதுகாப்பற்றதாக மாற்றப்படுகிறது. இந்திய ரயில்வேயில் தற்போது 3 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. விபத்து நிகழ்ந்த கிழக்கு ரயில்வேயில் 8 ஆயிரத்து 278  காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில், உயர்  பொறுப்புகளுக்கான பணியிடங்களும் அடங்கும். பணியிடங்களை நிரப்புவதில் பிரதமர் அலுவலகமும், அமைச்சரவைக் குழுவுமே முக்கிய பங்காற்றுகின்றன. 90-களில் இந்திய ரயில்வேயில் 18 லட்சம் பணியாளர்கள் இருந்தார்கள். அது தற்போது 12 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதிலும், 3.18 லட்சம் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறார்கள். இந்த காலிப் பணியிடங்கள் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. 

இந்த பணியிடங்களால் எஸ்.சி. எஸ்டி,  ஒபிசி சமூக மக்கள் பலனடைய முடியாமல்  தடுக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த 9 ஆண்டு களாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்? ரயில் இன்ஜின் ஓட்டுநர்கள் அவர்களுக் கான வழக்கமான நேரத்தைத் தாண்டி நீண்ட நேரம் ரயில்களை ஓட்டுகிறார்கள் என்பதை ரயில்வே வாரியம் சமீபத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அதிக பணிச்சுமை கொடுப்பது பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். இந்த பணி யிடங்கள் நிரப்பப்படாதது ஏன்? ரயிலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த  சலுகைகள் ரத்து செய்யப்பட்டது ஏன்? மைசூரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதை சுட்டிக்காட்டிய தென் மேற்கு பிராந்திர ரயில்வேயின் தலைமை செயல் நிர்வாகி, சிக்னல் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டிய தேவை இருப்பதாகக் கூறினார். சிக்னல் சிஸ்டத்தில் உள்ள குறைபாடு எதிர்காலத்தில் விபத்துக்கு வித்திடக்கூடும் என்றும் அவர் கூறி இருந்தார். மிக முக்கிய எச்சரிக்கையை இந்திய ரயில்வே அமைச்சகம் புறக்கணித்தது ஏன்? பாதுகாப்புக்கான தொழில்நுட்பம் இல்லாத நிலையில் பாலசோர் ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில்வே அமைச்சரின் பேச்சு மூலம் இது அம்பலமாகி இருக்கிறது. பாதுகாப்பு விஷயத்தில் காட்டப்பட்டிருக்கும் அலட்சியம் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸின் “ரக்‌ஷா  கவச்”  என்ற திட்டத்தை ‘கவச்’ என பெயர்  மாற்றிய ஒன்றிய அரசு, அதை 4 சதவிகித  வழித்தடங்களில் மட்டுமே செயல்படுத்தி யிருப்பது ஏன்? 

எனவே, பாதுகாப்புக்கான தொழில்நுட் பத்தை அனைத்து ரயில்களுக்கும் உடனடி யாக பொருத்த வேண்டும், ரயில் பயணி களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அரசு மேற்கொள்ள வேண்டிய மிக முக்கிய பணி. இதையே பால சோர் ரயில் விபத்து உணர்த்தி இருக்கிறது.  இந்நிலையில், குற்றச் சம்பவங்களை விசாரிக்கும் சிபிஐ அமைப்பிடம், ரயில் விபத்து  குறித்து விசாரிக்க பரிந்துரைத்து இருப்பது ஏன்? பிரச்சனையை திசை திருப்புவதற்கா? 2016-ஆம் ஆண்டு கான்பூரில் ரயில்  கவிழ்ந்து 150 பேர் உயிரிழந்தது தொடர்பாக,  தேசிய புலனாய்வு முகமையின் விசார ணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யாமல் அந்த வழக்கு விசாரணை முடித்துக்கொள்ளப் பட்டது. அந்த 150 பேரின் மரணத்திற்கு யார் தான் காரணம்? அதோடு, ஒடிசாவில் நிகழ்ந்துள்ள விபத்து நமது கண்களை திறக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக துறைசார் அமைச்சர் கூறிய அனைத்தும் பொய் என்பது அம்பலமாகியுள்ளது. எனவே, விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பதை அரசு  மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.”  இவ்வாறு மல்லிகார்ஜுன் கார்கே தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.