கொல்கத்தா, ஜுன் 23- இந்திய ராணுவத்தை ஆர்எஸ்எஸ் மயமாக்கும் ஒன்றிய அரசின் அக்னிபாதை திட்டம், மத வெறுப்பு மற்றும் மதவெறி, வகுப்புவாதப் பிளவு களைக் கண்டித்தும் நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமையை நிலைநாட்ட இடது முன்னணி மற்றும் பிற இடது சாரிக் கட்சிகள் பேரணி நடத்தின. இடது முன்னணி தலைவர் பிமன் பாசு, சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர்சூர்யகாந்த மிஸ்ரா, இடது முன்னணி, கட்சி மற்றும் பிற இடதுசாரி தலைவர்கள் பேரணிக்கு தலைமை தாங்கினர்.
கிசான் மோர்ச்சா போராட்டம்
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக ஜூன் 24ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை கூட்டு கிசான் மோர்ச்சா நடத்தவுள்ளது. அனைத்து இளைஞர்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி கள் பங்கேற்க வேண்டும் என்று கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது. ஏழு பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு, கருத்து தெரிவித்த கிசான் மோர்ச்சா தலைவர்கள், அக்னிபாதை திட்டம் ராணுவத்துக்கு எதிரான, விவசாயிக ளுக்கு எதிரான, தேச விரோதத் திட்டம் என்று சுட்டிக்காட்டினர்.
வெட்கக்கேடு
பெரும்பாலான ராணுவ வீரர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த வர்கள். படையினரின் ஆட்சேர்ப்பில் பெரிய அளவில் ஏற்படும் வெட்டுக் கள் மோசடியானவை. ராணுவ வீரர்க ளுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, பதவி இல்லை, ஓய்வூதியம் இல்லை என்பதை அமல்படுத்துவது வெட்கக்கேடானது. இதற்கு எதிராக மாவட்டம், தாலுகா மற்றும் வட்டார மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்படும். குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கப்படும். கிசான் மோர்ச்சா மீண்டும் ஜூலை 3ஆம் தேதி கூடுகிறது.