மோடி அரசாங்கம், சுதந்திரத்தை முடக்கும் விதத்தில் “நியூஸ் கிளிக்” இணைய இதழுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பதைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில் அக்டோபர் 10 செவ்வாய்க்கிழமையன்று தலைநகர் புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலச் செயலாளர் கே.எம்.திவாரி தலைமை வகித்தார். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமர்ஜீத் கவுர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் ஜி.தேவராஜன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)கட்சி சார்பில் ரவி ராய், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் ஆர்.எஸ். தாகர் ஆகியோர் உரையாற்றினர்.