நிலம்பூரில் இடதுஜனநாயக முன்னணி வேட்பாளர் எம். ஸ்வராஜ்
கேரள மாநிலம் நிலம்பூர் இடைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளராக எம். ஸ்வராஜை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் அறிவித் தார். வெள்ளிக்கிழமை அன்று நடை பெற்ற சிபிஎம் மாநில செயற்குழு எம்.ஸ்வராஜை வேட்பாளராக பரிந்து ரைத்தது என திருவனந்தபுரத்தில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் எம்.வி. கோவிந்தன் தெரிவித்தார். எம்.ஸ்வராஜ் தற்போது சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இதற்கு முன்பு இவர் சட்டமன்றத்தில் திரிபுனித்துரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி னார். நிலம்பூரைச் சேர்ந்த எம்.ஸ்வராஜ், மாணவர் மற்றும் இளைஞர் இயக்கங்கள் மூலம் பொது சேவையில் முக்கியத்து வம் பெற்றார். அவர் தேசாபிமானி பொறுப்பாசிரியராக உள்ளார். இவர் இந்திய மாணவர் சங்க மாநில செயலா ளர், வாலிபர் சங்க மாநிலத் தலைவர், செயலாளர் மற்றும் அகில இந்திய இணைச் செயலாளர் பொறுப்புகளை வகித்துள்ளார். 2016–2021 வரை திரிப் புனித்துராவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். வாலிபர் சங்க இதழான யுவ தாராவின் ஆசிரியராகவும் பணியாற்றி யுள்ளார். இவர் ஒரு சிறந்த பேச்சாளர், பல புத்த கங்களை எழுதியுள்ளார். பருவ இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் பல கட்டு ரைகளை எழுதியுள்ளார். இவரது முக்கிய படைப்புகள் “கியூபா உயிருடன் இருக் கிறது, பூக்களின் புத்தகம், மரணத்திற் காகக் காத்திருக்கும் கடவுள்கள்” போன்றவை ஆகும். எம். ஸ்வராஜ் நிலம்பூர் போத்துக்கல்லு பி.என். முரளீ தரன் - பி.ஆர். சுமாங்கியம்மா ஆகியோ ரின் மகனாவார். இவருக்கு சரிதா என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
பட்டாசு தொழிற்சாலையில் விபத்து: பஞ்சாபில் 5 பேர் பலி
பஞ்சாப் - ஹரியானா மாநில எல்லையில் உள்ளது முக்த்சர் மாவட்டம். பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதியான இம்மாவட்டத்தின் சிங்கே வாலா கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை யில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி யளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட் டது. இந்த வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 5 தொழிலாளர்கள் பலியா கினர். காயமடைந்த 25க்கும் மேற்பட் டோர் பதிண்டா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுகாதாரத் தகவல்கள் எதற்கு?
சுகாதாரத் தகவல்கள் திருட்டு தற்போது அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. ஒரு மருத்துவமனை மீது சைபர் தாக்குதல் நிகழ்த்தி அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் தரவுகள் திருடப்படும். பின்னர் அந்த நோயாளிகளை செல்போனில் அல்லது வாட்ஸ் அப்பில் அழைத்து, அவர்களின் நோய் தொடர்பானவையை சரியாகக் கூறி,”இந்த மருத்துவமனைக்கு வாருங்கள். குறைந்த செலவிலேயே மருத்துவம் பார்க்கலாம்” என மற்றொரு மருத்துவமனைக்கு விளம்பரம் செய்வதற்காக சுகாதாரத் தகவல்கள் திருடப்படுகின்றன எனக் கூறப்படுகிறது.