உரிமைகள் மற்றும் இடர் பகுப்பாய்வுக் குழு (Rights and Risks Analysis Group) ஆய்வின்படி, 2022 ஆம் ஆண்டில் மட்டும் 7 பெண் பத்திரிகையாளர்கள் உட்பட 194 பத்திரிகையாளர்கள் அரசு நிறுவனங்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளால் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர்; வேட்டையாடப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், 2010 இல் இருந்து இதுவரை பிணையில் வெளிவர முடி யாத சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்(UAPA) கீழ் நியூஸ்கிளிக் இணையதள நிறு வனத்தின் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் மனிதவள மேம்பாட்டு அலுவலர் அமித் சக்கர வர்த்தி உட்பட 16 பத்திரிகை யாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 5 பத்திரிகையாளர்கள் சிறையில் வாடுகின்றனர் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவுட்லுக் அக். 21, 2023