states

img

தேர்தலுக்காக ஜார்க்கண்ட்டில் சுற்றித் திரியும் பாஜக தலைவர்கள் ஏன் மணிப்பூருக்கு செல்வதில்லை?

ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரு கிறது. முதற்கட்டமாக 43 தொகுதி களுக்கு நவம்பர் 13 அன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை (நவம்பர் 20) மீத முள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு ஓய்ந்தது. இந்நிலையில்,”தேர்தலுக்காக ஜார்க்கண்ட்டில் சுற்றித் திரியும் பாஜக தலைவர்கள் ஏன் மணிப்பூருக்கு செல்வதில்லை?” என ஜார்க்கண்ட் முதல்வரும், ஜேஎம்எம் தலைவரு மான ஹேமந்த் சோரனின் மனைவி யும், எம்எல்ஏவுமான கல்பனா சோரன் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறு கையில்,”தேர்தலுக்காகவும், அதி காரத்தை கைப்பற்றவும் பாஜக மூத்த தலைவர்கள் ஜார்க்கண்ட் மாநி லம் முழுவதும் சுற்றித் திரிகிறார்கள். ஆனால் மணிப்பூர் மாநிலத்தில் பழங் குடி பெண்களுக்கு எதிராக இழைக் கப்படும் அட்டூழியங்களையும், அங்கு நிலவும் அசாதாரண சூழலை யும் கவனிக்கக் கூட பாஜக தலை வர்களுக்கு நேரம் இல்லை. ஜார்க் கண்டில் முந்தைய பாஜக அரசில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப் பட்டதால் குழந்தைகள் கல்வியை இழந்தனர். அதே போல சுமார் 11 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய் யப்பட்டன. இதனால் மாநிலத்தில் பட்டினி தலைவிரித்தாடியது. இதை யெல்லாம் மாற்றியது ஜனநாயகத் தின் நம்பிக்கை கொண்ட ஜேஎம்எம் கூட்டணி அரசு தான்” என அவர் கூறினார்.