சண்டிகர், ஜன.14- காங்கிரஸ் முன்னாள் தலைவ ரும் கேரளம் மாநிலம் வயநாடு தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி னார். இவர் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் மற்றும் தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பயணித்து டிசம்பர் 6- ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் பய ணத்தைத் தொடர்ந்தார். லூதியானாவில் சனிக்கிழமை காலை தொடங்கிய ராகுல்காந்தி யின் பயணம் பஞ்சாபில் தொடர் கிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் ஜலந்தர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். சந்தோக் சிங் சவுத்ரி கலந்துகொண்டார். அப்போது திடீ ரென அவரது உடல்நலம் பாதிக் கப்பட்டது. அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் லூதியானா பக்வாரா நகர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழி யிலேயே அவர் உயிரிழந்தார். அவ ரது இறப்பிற்கு மாரடைப்பு கார ணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ராகுலின் நடை பயணம் தற்காலிகமாக ரத்து செய் யப்பட்டு உள்ளது. பஞ்சாப் எதிர்க்கட்சித் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா கூறுகையில், சந்தோக் சிங் சவுத்ரி மற்றொரு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பி னருடன் நடந்து சென்று கொண்டி ருந்தபோது, கீழே சரிந்து விழுந் தார் என்றார்.