புதுதில்லி, டிச.7- தில்லி மாநகராட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள் ளது. இங்கு 15 ஆண்டுகளாக அதி காரத்தில் இருந்த பாஜக-வை வீழ்த்தி, தில்லி மாநகராட்சி நிர்வா கத்தை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி யுள்ளது. தில்லி மாநகராட்சியில் மொத்த முள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளைக் கைப்பற்றி யுள்ளது. அதேநேரம், கடந்த முறை 181 இடங்களில் வெற்றிபெற்றிருந்த பாஜக, இந்த முறை 104 இடங் களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளது. தில்லி மாநகராட்சியில் 2007 முதல் தொடர்ந்து 3 தேர்தல்களாக பாஜகவே வெற்றிபெற்று வந்தது. 2007-இல் தில்லி ஒரே மாநகராட்சி யாக இருந்தது. அது 2012 தேர்த லில் தில்லி வடக்கு, தில்லி தெற்கு, தில்லி கிழக்கு என 3 மாநகராட்சி களாக பிரிக்கப்பட்டது. இந்த 3 மாநக ராட்சிகளுக்கும் 2012, 2017 ஆண்டு களில் தேர்தல் நடந்தது. இந்த தேர் தல்கள் அனைத்திலும் பாஜக-வே வெற்றிபெற்றது. தில்லியில் அர விந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்தாலும் கூட மாநகராட்சித் தேர் தலில், பாஜகவே செல்வாக்கு பெற்று இருந்தது.
இதனிடையே, 2022 தேர்தலில், தில்லியின் 3 மாநகராட்சிகள், மீண் டும் 250 வார்டுகள் கொண்ட ஒரே மாநகராட்சியாக இணைக்கப்பட்டு, கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. பாஜக, ஆம் ஆத்மி கட்சி சார்பில் மொத்தம் 250 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 பேரின் மனுக்கள் தள்ளுபடியானதால் 247 வேட்பா ளர்களே போட்டியிட்டனர். மொத்த மாக 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களமிறங்கி னர். 1.45 கோடி வாக்காளர்களுக் காக 13,638 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, டிசம்பர் 4-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 50.48 சதவிகித வாக்கு கள் பதிவாகின.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி டிசம்பர் 7 அன்று வாக்கு எண்ணிக்கை நடை பெற்றது. மொத்தம் 42 மையங்க ளில் காலை 8 மணிக்குத் துவங்கிய இந்த வாக்குப்பதிவு பிற்பகல் வரை நடைபெற்றது. இந்த வாக்கு எண் ணிக்கையின் முடிவில், பெரும் பான்மைக்கு 126 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 104 இடங்களை மட்டுமே பெற்று தோல் வியைச் சந்தித்தது. ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கும் அதிகமாக 134 இடங்களைப் பெற்று தில்லி மாநகராட்சி நிர்வாகத்தைக் கைப் பற்றியது. தில்லியில் நீண்டகால மாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி வெறும் 7 இடங்களை மட்டுமே பெற்றது. சுயேட்சைகள் உள்ளிட்ட மற்றவர்கள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். இதன்மூலம் தில்லி மாநகராட்சி யை 15 ஆண்டுகளாக தன் கைவசம் வைத்திருந்த பாஜக, அதனை ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்து தோல்வி யைச் சந்தித்துள்ளது.
காங்கிரஸ், கடந்த முறை 21.09 சதவிகித வாக்குகளுடன் 30 இடங்க ளைப் பெற்றிருந்தது. அது இந்த முறை 11.68 சதவிகித வாக்குகளாக வும், 7 இடங்களாகவும் சரிந்துள் ளது. பாஜக கடந்த முறை 36.08 சத விகித வாக்குகளுடன் 181 இடங்க ளைப் பெற்றிருந்தது. தற்போது வாக்குகள் 39.09 சதவிகிதமாக அதி கரித்து இருந்தாலும், இடங்கள் 104 ஆக குறைந்து போனது. அதேநேரம் கடந்த முறை 26.23 சதவிகித வாக்கு களையும் 48 இடங்களையும் பெற்றி ருந்த ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை 42.05 சதவிகித வாக்குகளுடன் 134 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. எனினும், 2022 மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மியின் வாக்கு சதவிகிதம், அது 2020 மாநில சட்ட மன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு களை விடவும் குறைவாகும். தில்லி சட்டமன்றத் தேர்தலில் சுமார் 54 சத விகித வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றிருந்தது. தற்போது அது 42.05 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேநேரம் பாஜக 2020 சட்டமன்றத் தேர்தலில் 41 சதவிகித வாக்கு களைப் பெற்றிருந்தது. அது தற்போ தும் சுமார் 40 சதவிகித வாக்குகளாக தொடர்கிறது. எனினும் காங்கிரசின் வாக்குகளில் சரிபாதியை இந்த முறை ஆம் ஆத்மி தன்பக்கம் இழுத் ததே அக்கட்சியின் வெற்றிக்கு கார ணமாகி உள்ளது.