புதுதில்லி, டிச.29- 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரத மர் ஆன பின்னர், இந்தி, சமஸ்கிருத மொழி களைத் திணிக்கும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் 1. அசாமிஸ், 2. பெங்காலி, 3. குஜராத்தி, 4. இந்தி, 5. கன்னடம், 6. காஷ்மீரி, 7. கொங்கணி, 8. மலையாளம், 9. மணிப்பூரி, 10. மராத்தி, 11. நேபாளி, 12. ஒரியா, 13. பஞ்சாபி, 14. சமஸ்கிருதம், 15. சிந்தி, 16. தமிழ், 17. தெலுங்கு, 18. உருது, 19. போடோ, 20. சந்தாலி, 21. மைதிலி, 22. டோக்ரி என மொத்தம் 22 மொழிகள், அங்கீ கரிக்கப்பட்ட மொழிகளாக இடம்பெற்றுள்ள நிலையில், இந்தி, சமஸ்கிருத வளர்ச்சிக்கு மட்டுமே பல ஆயிரம் கோடி ரூபாய்களை அள்ளிக் கொட்டி வருகிறது. ஏனைய மொழி களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தொட ர்ந்து தங்களின் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தாலும், நரேந்திர மோடி அரசு தனது நட வடிக்கைகளை மாற்றிக் கொள்வதாக இல்லை. இந்நிலையில்தான், கடந்த 8 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ. 1,487.9 கோடியும், தமிழ் வளர்ச்சிக்கு வெறும் ரூ. 74.1 கோடியும் மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கி யிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செம்மொழிகளான தமிழ், சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எடுத்த நட வடிக்கைகள் குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அவருக்கு, ஒன்றிய அரசின் கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள் ளார்.
ஆண்டு தமிழ் சமஸ்கிருதம்
2014-15 8.27 125.80
2015-16 11.99 161.47
2016-17 5.10 149.19
2017-18 10.67 198.31
2018-19 4.65 214.37
2019-20 9.80 246.99
2020-21 11.73 192.85
2021-22 11.86 198.83
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த 2014 - 2015 கல்வியாண்டு முதல் 2021 - 2022 கல்வி யாண்டு வரை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கும், மத்திய சமஸ்கிருத பல்க லைக்கழகத்திற்கும் ஒதுக்கிய நிதி விவ ரங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், கடந்த 2014 ஆண்டு முதல் மத் திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு, ஒன்றிய பாஜக அரசு ரூ. 74.1 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதும், அதேநேரத் தில், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத் திற்கு ரூ.1,487.9 கோடியை வாரிக் கொடுத்தி ருப்பதும் அம்பலமாகி இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சிக் காக ஒன்றிய அரசு ஒதுக்கிய ஒட்டுமொத்த தொகையானது, சமஸ்கிருத வளர்ச்சிக்கு மோடி அரசு ஓராண்டில் ஒதுக்கிய நிதியை விட குறைவாகும். குறிப்பாக 2019-20இல் தமிழ் வளர்ச்சிக்காக மோடி அரசு ஒதுக்கியது வெறும் ரூ.10 கோடி. ஆனால், அதே ஆண்டில் சமஸ் கிருத வளர்ச்சிக்கு ரூ. 247 கோடி தூக்கிக் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அதிகாரப்பூர்வக் கணக்கெ டுப்பின்படி 6 கோடியே 90 லட்சத்து 26 ஆயி ரத்து 881 பேர் தமிழ்மொழி பேசுவோராக உள்ள னர். இது 11 ஆண்டுகளுக்கு முந்தைய 2011- ஆண்டுக் கணக்கெடுப்பு ஆகும். தற்போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். இந்தியா தவிர உலகம் முழுவதும் 30 நாடுகளில் தமிழ்பேசும் மக்கள் உள்ளனர். ஆனால், அதே 2011 ஆண்டின் கணக்கெ டுப்பின்படி இந்தியாவில் சமஸ்கிருதம் பேசு வோர் எண்ணிக்கை லட்சத்தில் கூட இல்லை. 24 ஆயிரத்து 821 பேர் மட்டுமே சமஸ்கிரு தம் பேசுவோராக உள்ளனர். இவ்வாறு நடை முறையில் பேசப்படாத - சாஸ்திர - சடங்கு கள் தவிர வேறெங்கும் புழக்கத்தில் இல்லாத ஒரு மொழிக்கு, பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து சுமார் 1500 கோடி ரூபாயை மோடி அரசு கொட்டி அழுதுள்ளது. இது நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. மோடி அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்க ளும் எழுந்துள்ளன.