அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் விலை உயர்வு கடுமையாக ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் விலைவாசி அதிக அளவு உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் பெட்ரோலிய பொருட்கள் விலை குறைந்திருந்தாலும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. லாரி போக்குவரத்து சுங்கச் சாவடி கட்ட ணம் பகல் கொள்ளையாக உள்ளது. சிஏஜி அறிக்கையில் இந்த கொள்ளை - ஊழல் குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஒன்றிய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரண மாக மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கூட அரிசிக்கும், கோதுமை க்கும் ஜிஎஸ்டி வரி போட்டதில்லை. ஆனால், தற்போதுள்ள ஆட்சி யாளர்கள் தொட்டதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி போடுகிறார்கள். இதன் காரண மாகவும் விலைவாசி கடுமையாக உயர் ந்துள்ளது. மேலும், வேலையில்லா திண்டாட்டம் தற்போது அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் தொழில் வளர்கிறது என பிரதமர் பல்வேறு நாடுகளுக்கு சென்று பேசுகிறார். ஆனால் எதார்த்த நிலை அப்படி இல்லை. வேலை யின்மை கடுமையாக அதிகரித்து வருகிறது. ஒன்றிய அரசுத் துறைகளில் 10 லட்சம் இடங்கள் காலியாக உள்ளதாக மாநிலங்களவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் மட்டும் மூணே கால் லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளது. இவ்வளவு வேலை வாய்ப்பு இருந்தும் இளைஞர்களுக்கு வேலை கொடுக்காத நிலையில் ஒன்றிய பாஜக அரசு உள்ளது. ரயில்வேயிலும் போதுமான பணியிடங்கள் நிரப்பாததன் விளை வாகத்தான் விபத்துகள் ஏற்படுகிறது.
உயிர்ப்பலிகள் ஏற்படுகிறது. இந்நிலையில், பாஜக பாத யாத்திரை நடத்தினாலும், அதிமுக மாநாடு நடத்தினாலும் மக்கள் மனதில் மாற்றங்களை உருவாக்கி விட முடியாது. அண்ணாமலை ஊர் ஊராகச் சென்று தமிழ்நாட்டில் ஊழல் என பேசி வருகிறார். ஆனால், மோடியின் ஊழல்களை பார்த்து உலகமே சிரிக்கிறது. அதைப் பற்றி அவர் பேச மறுக்கிறார். மத்திய தணிக்கை அதிகாரியே ஆய்வு செய்து சொல்கிறார்; மோடி ஆட்சியின் மெகா ஊழல்களைப் பற்றி. இதற்கு பதில் சொல்லத் தயாரா? நாமக்கல்லில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியிலிருந்து...