மும்பை, பிப்.24- உத்தரப் பிரதேசம் உள்பட தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் பாஜக-வுக்கு பெரும்பான்மை கிடைக்காது என பிரித்விராஜ் சவான் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான பிரித்விராஜ் சவான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது: கடந்தமுறை ராமர் கோவில் பிரச் சனை இருந்தபோது தேர்தல் நடந்தது. தற்போது ராமர் கோயில் ஒரு பிரச் சனை இல்லை என்பதால், தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் (உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தர கண்ட் மற்றும் மணிப்பூர்) பாஜக-வுக்கு பெரும்பான்மை கிடைக்காது. எங்களுக்கும் (காங்கிரஸ்), சமாஜ் வாதி கட்சிக்கும் பயங்கரவாத ஆதரவா ளர்களுடன் தொடர்பு உள்ளது என பிர தமர் மோடி குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடியிடம் ஏதே னும் ஆதாரம் இருந்தால், அதை அவர் நிரூபிக்க வேண்டும். ஆதாரம் பற்றி பேசாமல் இருந்தால், அவர் பேசு வதற்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றே அர்த்தம். வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அடிப்படைப் பிரச்சனை களைப் பற்றிப் பேசுவதற்கு அவரி டம் எதுவும் இல்லை. பொதுக்கூட்டங்க ளில் மோடி என்ன பேசினாலும், அவர் சர்வாதிகாரியாக இருக்க விரும்புவ தால் பாஜக வெற்றி ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என்று பொருளாதார நிபு ணர்கள், என்ஜிஓ-க்கள் கணிக்கின்ற னர். இவ்வாறு பிரித்விராஜ் சவான் கூறி யுள்ளார்.