மும்பை,பிப்.19- மும்பை விமான நிலையத்தில் ஊடுருவல் முயற்சியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு வாயில் 27 இல் ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது. இதனை பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை கண்ட றிந்து முறியடித்தது. இந்த ஊடுருவலில் ஈடுபட்ட நபரை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். இதனை உறுதி செய்துள்ள விமான பாது காப்பு அமைப்பு, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என்று தெரி வித்துள்ளது.