வாஷிங்டன்,செப்.27- அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற ஐ.நா.பொதுச் சபையின் 78 ஆவது அமர்வில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பல்வேறு வகை நலன்களை பிரதிபலிக்கும் வகை யிலான சமத்துவமான ஜனநாய கப்பூர்வ புதிய உலக ஒழுங்கு உரு வாகும் எனவும், சர்வதேச அளவில் முக்கிய முடிவுகளை சில நாடுகள் மட்டுமே தீர்மா னிக்கும் நிலை முடிவுக்கு வந்துவிட்டது என வும் கூறினார் . விவாதங்களின் போது ஐ.நா. சாசன விதிகள் பயன்படுத்தப்பட்டாலும், முடிவுகளை தீர்மானிப்பதில் சில நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.ஜனநாயகப்பூர்வ உலக ஒழுங்கு என்பதன் அர்த்தம் விதிகளை உருவாக்குபவர்கள் மற்ற நாடுகளை அடி பணியச் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதாகும் என அவர் கூறினார். பாகிஸ்தான் கனடாவை மையப்படுத்தி தீவிரவாதம் மற்றும் வன்முறைகளுக்கு எதி ரான பதிலை அரசியல் காரணிகளே தீர்மானிக் கின்றன என நாம் எண்ணிவிடக் கூடாது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளில் வளரும் நாடுகளின் பங்கேற்பு இருக்கும் வகையிலான சீர்திருத் தத்திற்கு அழைப்பு விடுத்தார்.
பலதுருவ ஒழுங்கின் வெளிப்பாடு
கொரோனா தொற்று மற்றும் உக் ரைன்-ரஷ்யா போரால் சமூக பொருளாதார வளர்ச்சி தேக்கம், உலகளவில் வட மற்றும் தென் பகுதி நாடுகளுக்கிடையே ஆழமான பிளவு உருவாகியுள்ளதையும் கிழக்கு மற்றும் மேற்குலக நாடு களுக்கிடையே ஒத்துழைப்பு உரு வாவதையும் சுட்டிக்காட்டி இந்த சர்வதேச வேறுபாடுகளை நாம் கவனிக்க வேண்டும் என வலி யுறுத்தினார். இந்தியா அங்கம் வகிக்கும் குவாட், பிரிக்ஸ்,ஐ2யு2 உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளை மேற்கோள் காட்டி இந்தியா அணிசேரா காலத்திலிருந்து உலகின் நண்பனாக மாறிவிட்டது. இது அனைத்து நாடுகளு டன் இணைந்து செயல்படும் இந்தியாவின் திறனை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணி யாற்றுவது பலதுருவ உலக ஒழுங்கின் (multi polar world ) வெளிப்பாடு எனவும் கூறினார்.
பாரதமாக மாறிய இந்தியா
உலக அரசியலில் தெற்குலக நாடுகளு டன் இணைந்து சில சீர்திருத்தங்கள் குறித்து ஐநா சபையில் உரையாற்றினாலும் பாஜக வின் அரசியல் கொள்கை மற்றும் நடைமுறை களை வெளிப்படுத்தும் வகையிலும் உரை யாற்றியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகால இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க திட்டம் வைத்துள்ளதாக பிரதமர் மோடி 2021 இல் கூறிய அம்ரித் கால் குறித்தும் அவர் பேசினார். பல சமயங்களில் இந்தியாவுக்குப் பதிலாக ‘பாரத்’ என கூறினார். பாரதத்தில் இருந்து வணக்கம் என தனது உரையைத் தொடங்கிய அவர் இந்தியா தான் பாரத் என்று குறிப்பிட்டு முடித்தார்.