இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானம் கடைப்பிடிக்க வேண்டும்!
ஐ.நா. மற்றும் உலக நாடுகள் அழைப்பு
பாகிஸ்தான் எல்லைக் குள் சென்று இந்தியா துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பாகிஸ் தான் அரசும் பதிலடிக்கு தயாராகி வருகிறது. இத்தகைய சூழலில் இரு நாடுகளுமே நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என உலக நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் அவை “இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அதிகபட்ச நிதா னத்தை கடைப்பிடிக்க வேண்டும்” என்று ஐ.நா. அவையின் பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்ட ரெஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவரது செய்தித் தொடர் பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையைத் தாண்டிய இந்திய ராணுவ நடவ டிக்கைகள் குறித்து அந்தோணியோ குட்டரெஸ் தனது ஆழ்ந்த கவலை யை தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் உச்சபட்ச பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இரு நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவுவது கவலை அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா இந்தியாவின் பதிலடி தாக்கு தல் குறித்து பேசியிருக்கும் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் மோதல் வருத்தம் அளிப்பதாகவும், இரு நாடுகள் இடையிலான போர்ப் பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியா மீது பயங்கரவாத தாக் குதல் நடந்த பிறகு இரு நாடு களுக்கு இடையிலான சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக வும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா அனைத்து வகையான பயங்கர வாதத்தையும் தங்கள் நாடு கண் டிப்பதாக தெரிவித்துள்ள ரஷ்யா, “இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் நிதானத் தைக் கடைப்பிடிக்க வேண்டும், முழு அளவிலான போர்ச்சூழல் உரு வாகி விடக்கூடாது” என கவலை தெரிவித்துள்ளது. சீனா “இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” எனவும், “அமைதி மற் றும் உறுதித்தன்மைக்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும்” எனவும் சீனா அழைப்பு விடுத்துள்ளது. மேலும், “அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் தாங்கள் எதிர்க்கிறோம்” எனவும் சீனா தெரி வித்துள்ளது. “இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. அத் துடன் இவ்விரண்டு நாடுகளுமே சீனாவின் அண்டை நாடுகளாக உள்ளன. இந்நிலையில் இந்தியா நடத் திய ராணுவத் தாக்குதல் வருத்த மளிக்கிறது” எனவும், “தற்போ தைய நிலைமை குறித்து, நாங்கள் கவலை கொண்டுள்ளோம்” என் றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ், ஜப்பான் இதேபோல, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, இந்தோ னேசியா, ஜப்பான் ஆகிய நாடு களின் வெளியுறவுத்துறை அமைச்ச கங்களும் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே நிதா னத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. “இந்தி யாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்த நீடித்த மோத லால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. இரண்டுமே ராணுவ சக்தி கொண்ட முக்கியமான நாடுகள். எனவே தான், நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என நாங் கள் கேட்கிறோம்” என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் கூறியுள் ளார். ஐக்கிய அரபு அமீரகம் “பிராந்திய மற்றும் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த தாக்குதல் மேலும் தீவிரமாகாமல் பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும்,” என ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரத மரும் வெளியுறவுத்துறை அமைச்ச ருமான ஷேக் அப்துல்லா பின் சயீத் அழைப்பு விடுத்துள்ளார். “இந்தியாவும் பாகிஸ்தானும் புரிதலுடன் செயல்பட வேண்டும்; இந்தியாவின் சமீபத்திய ராணுவ நடவடிக்கை, ‘முழுமையான போர்’ ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளது” என துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியா “நெருக்கடியைத் தீர்ப்பதில் இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பேச்சு வார்த்தைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என இந்தோ னேசியா வேண்டுகோள் விடுத்துள் ளது. மேலும், “இந்த நிலைமை பழிவாங்கும் வகையிலான தாக்கு தலுக்கு வழிவகுப்பதுடன் முழு அளவிலான போரை தூண்டும் என கவலை கொள்கிறோம். தெற்காசி யாவின் அமைதி மற்றும் உறுதித் தன்மைக்காக, இந்தியாவும் பாகி ஸ்தானும் நிதானத்தைக் கடைப் பிடித்து, பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை உறுதிப்படுத்த வேண்டும்” என்றும் இந்தோனே சியா வலியுறுத்தியுள்ளது.
இந்தியா பின் வாங்கினால் நாங்களும் போர்ப் பதற்றங்களை குறைப்போம்!
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்லாமாபாத் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்திய பிறகு ‘ப்ளூம் பெர்க்’ தொலைக்காட்சியில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கொடுத்த பேட்டியில், “பாகிஸ் தான் எந்த எல்லை வரை செல்லத் தயாராக உள்ளது” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஆசிப், “இந்தியாவிற்கு விரோதமான எதை யும் நாங்கள் செய்யவில்லை, என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஆனால் எங்கள் மீது தாக்குதல் நடந்தால், நாங்கள் பதிலடி கொடுப் போம். இந்தியா பின்வாங்கினால், நாங்கள் நிச்சயமாக போர்ப் பதற் றத்தைத் தணிப்போம்” என்று பதிலளித்துள்ளார்.
இஸ்லாமாபாத் இந்திய ஜெட் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதா?
இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவ அதிகாரிகள் இதனை ஏற்கவில்லை. பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பா ளர் கொடுத்த பேட்டியில் “இது வரை, மூன்று ரபேல், ஒரு சுகோய்-30, ஒரு மிக்-29 என ஐந்து இந்திய போர் விமானங் கள் பாகிஸ்தான் ராணுவத் தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள் ளன” என தெரிவித்துள்ளார். இவற்றுடன் ஒரு டிரோனும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரி வித்துள்ளார். இவை அனைத் தும் தற்காப்பு நடவடிக்கைக் காக தாக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனி னும் இந்த செய்திகளை இந் திய ராணுவமோ அரசாங்கமோ உறுதிப்படுத்தவில்லை.