பாஜக ஆளும் உத்தரப்பிர தேசத்தில் சிறுபான்மை யினர், தலித் மக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மொஹி தீன்பூர் கிராமத்தில் அண்டை வீட்டாருட னான சொத்து தகரா றில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை செய்யப்பட்ட 3 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சம்ப வம் நடத்த நாளான வெள்ளியன்று இரவு 62 வயதான விவசாயியான ஹோரி லால், அவரது 22 வயது மகள் பிரிஜ்காலி மற்றும் 26 வயது மக்களின் கணவர் ஷிவ் சாகர் 3 பேரும் குடிசையில் உறங்கிக்கொண் டிருந்தனர். அப்பொழுது சொத்து தக ராறில் பகைமையுடன் இருந்த பிற்படுத் தப்பட்ட தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த வர்கள் ஹோரி லால், பிரிஜ்காலி, ஷிவ் சாகர் ஆகிய 3 பேரையும் கூரிய ஆயு தங்களால் தாக்கிய நிலையில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குற்றவாளிகளின் வீடுகள் சூறை இந்த கொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மொஹிதீன்பூர் கிராம மக்கள் சாதி, மதமின்றி ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். மேலும் தலித் குடும்பத்தை கொலை செய்துவிட்டு தப்பியோடிய தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்த னர். 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொலை சம்பவத்தை அரங்கேறியுள்ள தாகவும், தலைமறைவாக உள்ள அவர் களை தேடி வருவதாகவும் பகுதி காவல் துறை கண்காணிப்பாளர் பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.