states

img

மக்கள் பிரச்சனை குறித்து ஒரு வரி கூட குடியரசுத் தலைவர் உரையில் இல்லை!

புதுதில்லி, பிப்.8- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து தல், வேலை வாய்ப்புகளை உருவாக்கு தல், கூட்டாட்சி முறையை வலிமைப் படுத்துதல் மற்றும் மகளிர் இட ஒதுக்கீட்டு  சட்டமுன்வடிவை நிறைவேற்றுதல் ஆகியன பற்றி, குறைந்தபட்சம் ஒரு வரியாவது குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை குழு  தலைவர் பி.ஆர்.நடராஜன் கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பி.ஆர்.நடராஜன் பேசுகையில், ‘‘குடியரசுத் தலைவர் உரை மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இது, ஒன்றிய அரசைப் புகழ்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தேர்தல் உரையாகவே இருந்தது. 

குதிரை பேரம் மூலம்  மாநிலங்கள் சீரழிப்பு

குடியரசுத் தலைவர் உரை என்பது,  ஒன்றியத்தை ஆளுகின்ற பாஜக அரசின், கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை கள் பற்றிய கதையாகவே இருந்தது. இந்த 19 பக்க உரையில், நமது வேளாண்மைத் துறை, விவசாயிகள், தொழிலாளர்கள், உழைப்பாளி வர்க்கம், இந்திய நாடு எதிர்கொள்ளும் வேலையின்மை பிரச்சனை ஆகியவை சம்பந்தமாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்க ளின் பக்கத்தில் ஒன்றிய அரசு நிற்க வில்லை என்ற உண்மையை, ஒப்புக் கொள்கின்ற விதத்தில் இந்த உரை உள்ளது. நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அல்லது இன்றைய நாளில், நாடு எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவை இந்த உரையின் பகுதி களாக இல்லையென்பது மிகவும் வருந்தத்தக்கது. இரண்டு தொடர்ச்சியான காலத்திற்கு, மத்தியில் நிலையான அரசை கொண்டுள்ளதற்காக தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதாக இந்த உரை இருப்பதோடு அரசியல் அமைப்பிற்கு எதிராக ஆளுநர்கள்,

மாநில  அரசுகளின் விவகாரங்களில் தலையிடு வது, மாநில அரசுகளின் செயல்பாட்டை  சீர்குலைப்பது என்ற விஷயத்தில் இந்த  உரை கண்ணை மூடிக் கொள்கிறது. இரண்டு தொடர்ச்சியான காலங்களுக்கு, மத்தியில் நிலையான அரசினை அளித்ததற்காக மக்களுக்கு நன்றி சொல்லும் போது, பாஜக கட்சியானது மக்களின் ஆணையை அடிபணியச் செய்ததன் மூலம், குதிரை பேரம் நடத்தி, நாட்டின் பல மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளதை இந்த உரை கவனிக்கவில்லை. இந்த உரையில் குறிப்பிடப்பட்டுள்ள பல அரசுத் திட்டங்கள், உண்மையில் மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காத வெறும் அறிவிப்புகள் மட்டுமே ஆகும்.  பொதுத்துறை நிறு வனங்களையும் நாட்டின் செல்வங் களையும் விற்கும் கொள்கைகளைப் பின்பற்றக்கூடிய ஒரு அரசு, எப்படி நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல இயலும்? படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் தொடர்ந்து பறிக்கப்படு வது, தொழிலாளர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவது, நாட்டில் மத நல்லிணக்கத்தையும் ஒற்று மையையும் அழிப்பதற்கு வேண்டு மென்றே முயற்சிப்பது போன்றவைகள் இந்த உரையில் குறிப்பிடப்படவில்லை.

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை...

விவசாயிகளை ஏமாற்றிய பாஜக அரசு, நாட்டின் வேளாண்மைத் துறையை கார்ப்பரேட்களிடம் ஒப்படைப்பதற்கான கொள்கைகளை அமல்படுத்த முயற்சிக்கிறது. விவசாயி கள் போராட்டம் முடிவுக்கு வந்த போது அளித்த வாக்குறுதிகளை, அரசு நிறை வேற்ற தயாராக இல்லாதது மட்டு மல்லாமல் அந்த வாக்குறுதிகளுக்கு நேரெதிரான வகையில் செயல்பட்டுக் கொண்டும் வருகிறது.  நாட்டிற்கு அனைத்து வசதிகளை யும் வழங்குவதற்கான ஒன்றிய அரசின் கொள்கைகள், நாட்டின் மொத்த  செல்வங்களையும் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் போது, நாட்டை முன்னேற்றப் பாதையில்  அழைத்துச் செல்கிறது என்பதே இந்த உரையின் சுருக்கமாகும்.  இந்த நிலையில், குடியரசுத் தலைவ ரின் உரையானது, நாட்டின் உண்மை நிலையைக் கண்டு கொள்ளாமல் கண்ணை மூடிக் கொள்வதாக உள்ளது.  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், கூட்டாட்சி முறையை வலிமைப் படுத்து தல் மற்றும் மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டமுன்வடிவை நிறைவேற்றுதல் ஆகியன பற்றி, குறைந்தபட்சம் ஒரு வரியாவது குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்’’ எனப் பேசினார்.