லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில், 1973 செப்டம்பரில் இடதுசாரி ஜனாதிபதி சால்வடார் அலண்டேயின் ஆட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியான ராணுவ அதிகாரி பினோசெட் தலைமையில் கலகம் நடத்தப்பட்டு கவிழ்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 11 அன்று அலண்டே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். உலகையே உலுக்கியே இந்த படுகொலையின் 50ஆம் ஆண்டையொட்டி, சிலி தலைநகர் சாண்டியாகோவில், அலண்டேயின் உருவப்படத்தை ஏந்தி, ஏகாதிபத்திய எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.