https://www.facebook.com/kbcpim/
https://twitter.com/kbcpim
காவிரி நதிநீர் பங்கீட்டில், நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகுதான் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அது கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் மழைப்பொழிவு உள்ளிட்ட நிலைமைகளை கணக்கில் கொண்டு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட உத்தரவிட்டது. அதை உச்சநீதிமன்றமும் உறுதிசெய்து தெரிவித்துவிட்டது. ஆனால், கர்நாடக மாநில அரசாங்கம் தீர்ப்பை அமலாக்க மறுக்கிறது, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்தால் மக்களை திரட்டி போராடுவோம் என எதிர்க் கட்சியான பாஜகவும் அரசியல் செய்கிறது. ஆதாயத்திற்காக இருதரப்பும் கர்நாடக மக்களை போராட்டத்திற்கு தூண்டுவது நாட்டு நலனுக்கு முரணானது. நீதிமன்றம், கூட்டாட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கையையே சிதைக்கக் கூடியது. அரசியல் சாசனத்தின் மீது உறுதியேற்று அதிகாரத்திற்கு வந்த மாநில அரசாங்கமும், பாஜகவும் - அந்த உறுதிக்கு நேர்மாறாக செயல்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உச்ச நீதிமன்றமும், ஒன்றிய அரசாங்கமும் உறுதியுடன் நின்று தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை காக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.