புதுதில்லி, பிப்.4- ‘ஹிண்டர்சன் ரிசர்ச்’ ஆய்வறிக்கை வெளியான பின்னணியில், கடந்த 10 நாட்க ளில் மட்டும், அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பு ரூ. 10 லட்சத்து 28 ஆயிரம் கோடி அளவிற்கு சரிவைக் கண்டுள்ளது. இதில், அதானி மட்டும் தனது சொத்து மதிப்பில் சுமார் 4 லட்சத்து 92 ஆயிரம் கோடி யை இழந்துள்ளார். கொரோனாவுக்கு பிந்தைய 2 ஆண்டு களில் அதானி குழும நிறுவனங்களின் சொத்து மதிப்பு 819 சதவிகிதம் அதிகரித்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த வணிக ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டர்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research), இதுதொடர்பாக ஆய்வு செய்து, கடந்த ஜனவரி 24 அன்று 106 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “அதானி குழுமத்தின் வளர்ச்சி உண்மையானது அல்ல. அதானி குழும நிறு வனங்கள் தங்கள் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வைக் காட்டி மிக அதிக அள வில் கடன் பெற்றுள்ளன. முதலீட்டாளர்களை யும் ஏமாற்றி வருகின்றன. அதானி குழுமம் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்துள் ளது; அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளி நாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடு பட்டுள்ளனர்” என்று கூறியது. இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளைக் கண்டுபிடிப்பதில் ‘ஹிண் டன்பர்க் ரிசர்ச்’ நம்பகத்தன்மை கொண்ட நிறுவனம் என்பதுடன், 2017 முதல் கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 16 நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டுபிடித்து ‘ஹிண் டன்பர்க் ரிசர்ச்’ அம்பலப்படுத்தி இருப்ப தால், அதானி குழுமம் தொடர்பான அறிக்கை, உலக பங்குச் சந்தை முதலீட்டாளர்களி டையே அதிர்வுகளை ஏற்படுத்தியது. அவர் கள் அதானி குழும பங்குகளில் தாங்கள் செய்துள்ள முதலீடுகளை எடுத்துக் கொண்டு வேகவேகமாக ஓட ஆரம்பித்தனர். இதனால் பங்குச் சந்தையில் அதானி குழுமத்தைச் சேர்ந்த 10 நிறுவனங்களின் பங்குகள் கடும் அடிவாங்க ஆரம்பித்தன. அதானி குழும பங்குகள் 2 நாட்களில் மட்டும் 4.20 லட்சம் கோடி அளவிற்கான சந்தை மதிப்பை இழந் தன. இந்த அடி அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தது. அதானி குழுமத்தின் 2 வெளிநாட்டு முத லீடுகள் குறித்து, ஏற்கெனவே விசாரணை நடத்திய இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான ‘செபி’ (SEBI), புதிதாக ‘ஹிண் டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை தொடர்பான ஆவ ணங்களை தாக்கல் செய்யுமாறு அதானி குழு மத்திடம் கேட்டது.
அதானி குழுமத்துக்குச் சொந்தமான அதானி எண்டர்பிரைசஸ், அதானி துறை முகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய 3 நிறுவனங்களை, இந்திய பங்குச் சந்தை அமைப்புக்களான தேசிய பங்குச் சந்தை யும் (NIFTI) மும்பை பங்குச் சந்தையும் (SENSEX) குறுகிய கால கூடுதல் கண்கா ணிப்பில் (ASM) கொண்டுவந்துள்ளதாக அறி வித்தன. அமெரிக்காவின் சிட்டிகுரூப் (Citigroup) நிறுவனத்தின் வெல்த் பிரிவும், ஸ்விட்சர் லாந்து நாட்டின் ‘கிரெடிட் சூயிஸ்’ நிறு வனமும், அதானி குழுமம் மார்ஜின் கடன்க ளுக்கு அதானி குழும நிறுவனங்களின் பத்திரங்களைப் பிணையமாக ஏற்றுக் கொள்வதை நிறுத்துவதாக அறிவித்தன. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை, பிப்ரவரி 7-ஆம் தேதி முதல், அமெரிக்கப் பங்குச் சந்தையின் ‘டவ் ஜோன்ஸ் நிலைத் தன்மை’ Dow (Jones Sustainability) குறி யீட்டிலிருந்து, முதல் நீக்குவதற்கு முடிவு செய்திருப்பதாக ‘டவ் ஜோன்ஸ்’ நிறுவனம் அறிவித்தது.
உலகளாவிய அளவில் முதலீட்டா ளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிலைத் தன்மை முதலீட்டில் முக்கிய இணைப்புப் புள்ளியாக ‘டவ் ஜோன்ஸ்’ நிலைத்தன்மை குறியீடு இருப்பதால், இது அதானி குழு மத்திற்கு விழுந்த மற்றொரு அடியாக அமைந்தது. இதற்கு அடுத்ததாக, அதானி குழும நிறு வனங்கள் பெற்றுள்ள கடன் விவரங்கள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யு மாறு, வங்கி நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்ச் வங்கி உத்தரவிட்டது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையால், அண்டை நாடான வங்கதேசம், அதானி நிறு வனத்திடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தமும் சிக்கலில் மாட்டியது. இவை அதானி குழுமத்தின் மீதான நம் பிக்கையை மேலும் சிதைத்த நிலையில், முத லீடுகள் வேகமாக வெளியேறின. இதனால், ரூ. 20 ஆயிரம் கோடி அளவிற் கான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்கு களை ‘பாலோ ஆன் பப்ளிக் ஆபர்’ (Follow- on Public Offer - FPO) முறையில் விற்க முடிவு செய்திருந்த அதானி, அந்த திட்டத்தையே கைவிடுவதாக அறிவித்தார்.
இந்த பின்னணியில்தான், 125 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 3-ஆவது பெரிய பணக்காரராக இருந்த கவுதம் அதானி கடந்த 10 நாட்களில் சுமார் 60 பில்லியன் டாலர் அளவிற்கான இழப்பை சந்தித்துள்ளார். 61.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உல கின் 17-ஆவது பணக்காரர் என்ற இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். தனிப்பட்ட சொத்து மதிப் பில், இதுவரை சுமார் 4 லட்சத்து 92 கோடி ரூபாயை இழந்துள்ளார். அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 19 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபா யாக இருந்த நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் 10 லட்சத்து 20 ஆயிரம் கோடி அள விற்கு சந்தை மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது, அதானி குழுமத்தில் முதலீடு செய் துள்ள இந்திய பொதுத்துறை நிறுவனங்க ளுக்கும் குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தி யுள்ளது. அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி ரூ. 36 ஆயிரத்து 474 கோடியே 78 லட்சத்தை முதலீடு செய்துள்ளோம். இது எல்ஐசி-யின் ஒட்டுமொத்த முதலீடுகளில் ஒரு சதவிகி தத்துக்கும் குறைவு என எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்தாலும், இந்த பங்குகளின் சந்தை மதிப்பு ரூ. 74 ஆயிரம் கோடியாகும். அதுமட்டுமன்றி, அதானி குழும பங்குகளின் அளவில் 8 சதவிகிதம் எல்ஐசி-யிடம் உள் ளது.
வங்கிகளிடமிருந்து அதானி குழும நிறு வனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் கோடியை கடனாக பெற்றுள்ள தாகவும், அவற்றில் இந்திய வங்கிகள் வழங் கிய கடன் சுமாா் 40 சதவிகிதம் எனவும் கூறப் படுகிறது. மேலும், இந்திய வங்கிகளிலும், 90 சதவிகிதக் கடன்களை பொதுத் துறை வங்கிகளே வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரூ. 22 ஆயிரம் கோடி, பஞ்சாப் நேசனல் வங்கி ரூ. 7 ஆயி ரம் கோடி, பாங்க் ஆப் பரோடா ரூ. 7 ஆயி ரம் என கடன்களை வழங்கியுள்ளன. வங்கி களின் இந்த கடன் விவரங்கள் இன்னும் முழு மையாக வெளியாகவில்லை.