புதுதில்லி, மே 29 - 2024 தேர்தலிலும் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால், பாஜக முதுகெலும்பற்ற கட்சியாகி விடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியடைந்துள்ள பாஜக தலைவர்கள், 2024 மக்களவைத் தேர்தலிலும் இந்த தோல்வி தொடர்ந்து விடக் கூடாது என்பதற்காக, தீவிர யோசனைகளில் இறங்கியுள்ளனர். இதனடிப்படையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து, அண்மையில் பேட்டி அளித்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, 300-க்கும் அதிக மான இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்று கூறினார். அத்துடன் மீண்டும் மோடியே பிரதம ராக பொறுப்பேற்பார் என்று தெரிவித்திருந்தார். இதனால் அவரே மீண்டும் பிரதமர் வேட்பாள ராக நியமிக்கப்படுவார் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் டுவிட்டர் சமூகவலைத்தளத் தில் கருத்து தெரிவித்திருந்த நிதிஷ் ராஜ் என்ற பயனர் ஒருவர், பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமியைக் குறிப்பிட்டு, “மிக முக்கியமான தலைவரான உங்களை பாஜக ஓரங்கட்டுவதைப் பார்க்க முடிகிறது. இப்படியே போனால் பாஜக அழிந்துவிடும்” என்று கூறியிருந்தார். இதற்கு சுப்பிரமணியசாமி பதிலளித்துள் ளார். அதில், “2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி நிறுத்தப்படா விட்டால், பாஜக வளரும். இல்லையெனில் முதுகெலும்பற்ற கட்சியாக வீழ்ச்சியடையும்” என்று அதிரடியாக குறிப்பிட்டுள்ளார்.