மக்களவையில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தனி யிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். இந்த விவ காரம் தொடர்பாக மக்களவை நெறி முறைக் குழு மஹுவா மொய்த்ராவிற்கு சம்மன் அனுப்பியது. சம்மனை தொட ர்ந்து விசாரணைக்காக வியாழனன்று காலை 11 மணிக்கு நேரில் மஹுவா மொய்த்ரா மற்றும் எதிர்கட்சித் தலை வர்கள் ஆஜரானார்கள். முதலில் குழு வுக்கு கிடைக்கப் பெற்ற ஆவணங்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஐக்கிய ஜனதா தளம் எம்.பி., “நெறி முறை குழுவுக்கு மஹுவா மொய்த்ரா இப்போது ஒரு சாட்சியாக வந்துள்ளார்; எம்.பி.யாக இல்லை” என்று நினை வூட்டினார். வெளிநடப்பு - கண்டனம் தொடர்ந்து அந்தக் குழு நடந்து கொண்ட விதத்தில் அதிருப்தி அடைந்த மஹுவா மொய்த்ரா மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி கூறுகையில், “மஹுவா விடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத் தும் திரவுபதி துகிலுரிதல் படலம் போல இருந்தது” எனக் கூறினார். “ஒரு பெண்ணிடம் (மஹுவா மொய்த்ரா) அவரின் தனிப்பட்ட விஷ யங்களை எல்லாம் கேட்டனர். தனிப் பட்ட விஷயங்களைக் கேட்க அவர் களுக்கு உரிமை இல்லை. அதனால் நாங்கள் வெளிநடப்புச் செய்தோம்” என ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. கிர்தாரி யாதவ் கூறினார். “நெறிமுறைக் குழுத் தலைவர் கேட்ட அனைத்துக் கேள்விகளும் அவர் யாரோ ஒருவரின் நலன் கருதி செயல்படு கிறார் என்பதாகவே உணர்த்தியது. இது மிகவும் மோசமான விஷயம்” என காங்கிரஸ் எம்.பி. உத்தம் குமார் ரெட்டி கூறினார்.