states

img

பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியதாக கைது செய்யப்பட்ட 16 பேர் விடுதலை

கடந்த 2017 ஜூன் 18 அன்று  இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறு திப்போட்டியில் இந்திய அணியை  வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பி யன் பட்டம் வென்றது. அந்த கால கட்டத்தில் பாஜக ஆளும் மத்தி யப்பிரதேச மாநிலத்தின் மொஹத்  என்ற கிராமத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டா டியதாக இந்துத்துவா அமைப்  பைச் சேர்ந்த ஒருவர் புகார் அளிக்க  2 சிறார்கள் உட்பட 19 இஸ்லாமி யர்களை போலீசார் செய்தனர். இதில் 2 சிறுவர்கள் விடுவிக்கப்  பட்ட நிலையில், மற்ற அனைவரும்  சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்  பட்டவர்கள் சார்பில் தொடுக்கப் பட்ட வழக்கின் இறுதி விசாரணை  புர்ஹான்பூர் மாவட்ட நீதிமன்றத்  தில் புதனன்று நடைபெற்றது. புகார் அளித்த இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்,”அரசு மற்றும் போலீசாரின் அழுத்தத்  தால் பொய்யான குற்றச்சாட்டு களை கூறினேன்” என நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்டதால், இது ஜோடிக்கப்பட்ட வழக்கு எனக்கூறி 16 பேரையும் புர் ஹான்பூர் மாவட்ட நீதிமன்றம் விடு தலை செய்தது. செய்யாத குற்றத்  திற்காக கைது, சிறை, போலீசா ரின் தாக்குதல், தேசத்துரோகிகள் என பல்வேறு அவதூறுகளை சுமந்த 16 பேர், 7 ஆண்டு சிறை வாசத்துக்கு பிறகு விடுதலையான  சம்பவம் கடும் அதிர்ச்சி அலையை  ஏற்படுத்தியுள்ளது. 17 பேரில் 2 குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர் 2019இல் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்  பிடத்தக்கது. மொஹத் கிராமத்தில் கிரிக்கெட் போட்டியை பார்ப்பது கிடையாது பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியவர்களாக மொஹத்  கிராமத்தில் 17 பேர் கைது செய் யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அக்  கிராமத்தில் இந்தியா – பாகிஸ்தான்  மோதும் கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சியில் யாரும் பார்ப்பது கிடையாது. முக்கியமாக  கிரிக்கெட் போட்டியை வெறுக்  கும் அளவிற்கு மொஹத் கிராம வாசிகள் தள்ளப்பட்டுள்ளனர் என கிராமத்தின் தலைவர் கூறி யுள்ளார்.