states

img

தனது ஒரு வீட்டிற்கு மட்டும் 22 ஏ.சி.க்களை பயன்படுத்தும் அசாம் பாஜக சபாநாயகர்!

கவுகாத்தி, ஜூன் 10 - மின் கட்டணம் அதிகமாக இருக்கி றது என்றால், மரத்தடியில் அமர்ந்து இளைப்பாருங்கள் என்று கூறிய அசாம் பாஜக சபாநாயகர், தனது வீட்டில் 22 ஏ.சி.க்களை (Air Conditioner -AC) பயன்படுத்தி வருவது அம்பலமாகி இருக்கிறது. அசாம் மாநில ஆளும் பாஜக அரசு, தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்கள் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருவதுடன், ஆங்காங்கே போராட்டங்களையும் நடத்தி வரு கின்றனர். இந்நிலையில், மின்கட்டண உயர்வு க்கு எதிராக, பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த அசாம் சபாநாயகர் பிஸ்வாஜித் தைமாரி, “ஆமாம், மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு என்ன?  மாநில அரசானது மின் சாரத்தை தனியாரிடம்தான் வாங்கி வருகிறது. அந்த தனியார் நிறுவனங் கள் கொள்முதல் விலையை அதி கரித்து விடுகின்றன. அதனால்தான் மாநில அரசும் மின்சார கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.. மின்சார கட்டணத்தை உங்களால் செலுத்த முடியவில்லை என்றால், பேன் சுவிட்சை எல்லாம் போடாதீர்கள்... வீட்டுக்கு வெளியே போய் மரத்தடியில் அமர்ந்து கொள்ளுங்கள்..” என்று மக்களைக் கேலி செய்திருந்தார்.

சபாநாயகர் பிஸ்வாஜித் தைமாரி யின் இந்த பதில், அசாம் மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்எல்ஏ கமலாக்யா தேய் புர்கயசதா, பிஸ்வாஜித் தைமாரியின் வீடு முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தினார்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலாக்யா தேய் புர்கயசதா, “சபாநாயகரின் அதிகாரப்பூர்வ வீட்டில் மொத்தம் 22 ஏசிகள் பொருத்தப் பட்டுள்ளன. வீட்டின் ஒவ்வொரு மூலை யிலும் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. வீட்டு பாதுகாவலர்களின் ஓய்வு அறையிலும் ஏசி பொருத்தப்பட்டுள் ளது. அவருக்கு எப்படி மக்களின் துயரம் தெரியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “தன்னை வாக்களித்து தேர்ந்தெடுத்த அசாம் மக்களை சபாநாயகர் பிஸ்வாஜித் அவமானப்படுத்தி இருக்கிறார்” என்றும் சாடியுள்ளார். இதேபோல திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. சுஷ்மிதா தேவ் பேசுகையில், “ஒரு அரசாங்கம் என்பது மக்களுக்கானது. ஆனால் பாஜக தலைவர்களோ மக்களை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். மக்களின் உணர்வுகளைப் புண் படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதில் ஒன்றுதான் சபா நாயகர் பிஸ்வாஜித்தின் ‘மரத்தடியில் ஓய்வெடுங்கள்’ என்கிற கருத்து” என்றார்.