புதுதில்லி, டிச.10- கங்கை நதியைத் தரப்படுத்த பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின் போது, பி.ஆர். நடராஜன் சமீப காலங்களில் புனித கங்கை நீரின் தரம் பற்றிய ஆய்வினை அரசு மேற்கொண்டதா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும், தூய்மைப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய நீர்சக்தித்துறை இணையமைச்சர் டுடூ, அளித்த பதில் வருமாறு: கங்கை நதி பாயும் முக்கிய ஐந்து மாநி லங்களில், அந்தந்த மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் 97 இடங்களில் நதிநீர் தர மதிப்பீட்டை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், “நமாமி கங்கா” திட்டத்தின் கீழ் மேற்கொண்டு வருகிறது என்றும், கோவிட் -19 க்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் கங்கை நதி நீரின் தரத்தை கண்காணிக்க மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள், மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் மற்றும் பிற முக மைகள், கங்கை நதி மற்றும் அதன் கிளை நதிகள் ஆகியவற்றின் நீரின் தரத்தின் மீது, பொது முடக்கத்தின் தாக்கம் பற்றிய மதிப்பீடு செய்தது.
பொதுமுடக்க காலத்தில் முன்னேற்றம்
அவற்றின் அடிப்படையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், கங்கை நதி மற்றும் அதன் கிளை நதிகளின் பல்வேறு நீட்சிகளில் வேறு வேறு நீர் தர அளவுகோல்களில் உறுதி யான போக்கு எதுவும் இருக்கவில்லை என அறி யப்பட்டதாக அறிவிக்கிறது. எனினும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் அறிக்கை யின் படி, கங்கை நதி நீரின் தரத்தில் பல்வேறு அளவுகளில் முன்னேற்றம் உள்ளது என்றும் நதியின் மாசுபட்ட நீட்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் அறியப்படுகிறது. இதற்கு காரணம், நீர்ப்பிடிப்பு பகுதிக ளில், மழை காரணமாக புதிய நீர் வரத்து அதிகரித்ததும், பொது முடக்க காலத்தில் - நிறுவ னங்களின் கழிவுகள் வெளியேற்றம் இல்லா திருந்ததும், நதியில் குளித்தல், சடங்குகள் செய்தல் போன்ற மனித நடவடிக்கைகள் குறைந்த தும், கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுலாக்கள், திடக் கழிவுகள் குறைந்ததும், அதிகப்படியான துணி துவைத்தல் இல்லாதது போன்றவையாகும். மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் 2018ஆம் ஆண்டு அறிக்கையின்படி “நமாமி கங்கா” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தலையீடுகளால், முற்காலத்தில் மாசுபட்ட கங்கை நதியின் பல்வேறு நீட்சிகளில் நீரின் தரம், குறிப்பிடத்தக்க வகையில் முன்னே றியுள்ளது. பொது முடக்கத்தின் போது, எந்தவித தடங்கலுமின்றி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யங்கள் அனைத்தும், தொடர்ந்து செயல்படுவது உறுதி செய்யப்பட்டது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யங்கள் தொடர்ந்து செயல்படுகையில் எல்லாவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. நதிகள் மாசு அடைதலை குறைப்பதற்கான பல்வேறு தலையீடுகள் தொடரப்பட்டன என்றும் கூறி யுள்ளார். (ந.நி.)