குஜராத் ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.6 கோடி சொத்துகள் முடக்கம்
பாஜக ஆளும் குஜராத் மாநி லத்தின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சர்மா தொடர்புடைய ரூ. 6 கோடி சொத்துக ளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கட்ச் மாவட்ட ஆட்சியராக இருந்த போது தனியார் நிறுவனத்துக்கு முறை கேடாக நிலத்தை விற்றதாக மோசடி புகார் தொடர்பாக பிரதீப் சர்மா, அவரது நண்பர் சஞ்சய் ஷா உள்ளிட்டோர் மீது குஜராத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். குஜராத் காவல்துறை பதிந்த வழக்கின் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத் தில் அமலாக்கத்துறை விசாரணை மேற் கொண்டு வந்தது. இந்நிலையில், குஜராத்தின் பூஜ், கட்ச்சில் உள்ள பிரதீப் சர்மாவுக்கு சொந்த மான வீட்டு மனைகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது. இதன் மதிப்பு ரூ.6 கோடி என வெளியாகியுள்ளது. மோசடி வழக்கில் பூஜ் நீதிமன்றம் பிரதீப் சர்மாவுக்கு ஏற்கெனவே 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒன்றிய அமைச்சரவை இன்று மீண்டும் கூடுகிறது
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பைசரன் சுற்றுலா தலத்தில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதி கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வ லைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் நடந்த அடுத்த நாளான ஏப். 23 அன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்க ளுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தி ற்கு பிறகு பிரதமர் மோடி பீகார் மாநில சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில், மீண்டும் புதன்கிழமை அன்று தில்லியில் பிரதமர் மோடி தலை மையில் பாதுகாப்புக்கான அமைச்சர வைக் குழுவின் 2ஆவது கூட்டம் நடை பெற உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ள உள்ளனர். பஹல் காம் தாக்குதல் தொடர்பாக இந்த கூட்டத் தில் அடுத்தகட்ட முக்கிய முடிவுகள் எடுக் கப்படலாம் என செய்திகள் வெளியாகி யுள்ளன.
ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே போன்று பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதி ராக நடவடிக்கைகளை அறிவித்து வருவ தால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஒன்றிய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலை மையில், உள்துறை அமைச்சகத்தின் முக்கிய உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இந்தக் கூட் டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, எல்லைப் பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல்கள், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலில் முன்னாள் பாக். ராணுவ வீரருக்கு தொடர்பு?
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடந்த மறுநாளே, தாக்குதலை நடத்தியவர்க ளாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வரை படங்கள் வெளியாகின. தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படுபவர்களை புலனாய்வு அதி காரிகள் தேடி வருகின்றனர். இந்நிலையில், பஹல்காம் தாக்குத லுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட தாக கூறப்படும் ஹாஷிம் மூசா குறித்து பகீர் தகவல்கள் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படை யில் பணியாற்றிய ஹாஷிம் மூசா, ராணு வத்தில் பணியாற்றிய போதே தடை செய்யப்பட்ட அந்நாட்டின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் இயங்கியதாக கூறப்படுகிறது. பயங்கர வாத நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் ஹாஷிம் மூசாவை வெளியேற்றி இருக்கிறது. இத னால் சுதந்திரமாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் இணைந்து ஹாஷிம் மூசா பணியாற்றியதாகவும், பிறகுதான் இந்தி யாவுக்குள் நுழைந்ததாகவும் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
2 ஆண்டுகள் இந்தியாவில்...
2023ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தி யாவுக்குள் நுழைந்த ஹாஷிம் மூசா, தன் பெயரை மாற்றிக் கொண்டு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் வசித்து வந்தி ருக்கிறார். அங்கு இருந்தபடி, தாக்கு தல்களில் பங்கேற்றிருக்கிறார் ஹாஷிம் மூசா. பஹல்காம் உட்பட ஏற்கனவே நடந்த 3 பயங்கரவாத தாக்குதலில் ஹாஷிம் மூசா ஈடுபட்டதாக தெரிகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான “தி ரெஸ்டண்ட் பிரண்ட்” பொறுப்பேற்றிருக்கும் நிலையில், ஹாஷிம் மூசாவின் பின்னணி தொடர் பான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.