states

img

பங்குச்சந்தையில் அதானி வரலாறு காணாத ஊழல்

மோடி பிரதமர் ஆனதும் ரூ.28,14,214 கோடி கல்லா கட்டிய அதானி

போட்டுடைத்த ஓசிசிஆர்பி

புதுதில்லி, ஆக.31-  தனது சொந்த பங்குகளை தானே ரக சியமாக வாங்கி பங்குச்சந்தையில் அதானி வரலாறு காணாத முறைகேடு செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த  வர்த்தக ஆராய்ச்சி நிறுவனமான ஓசிசி ஆர்பி அறிக்கை வெளியிட்டுள்ளது.  பெரும் பணக்காரர்களும், பெரும் தொழில் நிறுவனங்களும் ஊழல், சட்ட விரோத பணப் பரிமாற்றம், கறுப்பு பண பதுக்கல், சட்டவிரோத பரிவர்த்தனை மற்றும் பங்குச்சந்தை முறைகேடு ஆகியவற்றில் ஈடுபடுவதை துப்ப றிந்து, ஆதாரங்களுடன் ஆய்வுக் கட்டு ரைகளை வெளியிடும் ஓசிசிஆர்பி (OCCRP) எனும் ஊழலுக்கு எதிரான  அமைப்பு, உலகின் பெரும் பணக்காரர் களின் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸோரோஸ் என்பவரின் நிதியுதவியுடன் இயங்கி வருகிறது.

தனது பங்குகளை தானே வாங்கிய அதானி 

இந்த ஓசிசிஆர்பி அமைப்பு அதானி  குழுமம் செய்த பல்வேறு பரிமாற்றங் களின் ஆதாரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை யில், ‘‘அதானி குழுமத்தின் மொரீஷி யஸ் பரிவர்த்தனைகள் குறித்த விவ ரங்களை மொரீஷியஸ் நிறுவனங்கள்  மற்றும் அதானி குழுமத்தின் மின் னஞ்சல்கள் மூலம் கண்டுபிடித்தோம். அதில், 2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் மொரீஷியஸ் நிறுவ னங்கள் மறைமுகமாக சுமார் பல மில்லி யன் டாலர் மதிப்பிலான நிதியை (Opaque Funds) இந்திய பங்குச்சந்தை யில் பட்டியலிடப்பட்ட அதானி குழும பங்குகளில் முதலீடு செய்துள்ளது. மொரீஷியஸ் நிறுவனம் என்ற பெயரில்  அதானி குழும பங்குகளை வாங்கிய இரண்டு பேர் நாசர் அலி ஷபன் அஹ்லி  மற்றும் தைவானின் சாங் சங்-லிங் ஆவர்.  இவர்கள் அதானி குடும்பத்தின் மிகப்  பெரிய வணிகக் கூட்டாளிகள். இவர்கள்  இருவரும் அதானி குழும நிறுவனத்தில்  ஒரு காலக்கட்டத்தில் இயக்குநர்களாக இருந்துள்ளனர். மேலும் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்பு டைய நிறுவனங்களிலும் நாசர் அலி,  சாங் சங்-லிங் ஆகிய இருவருக்கும் தொடர்பு உண்டு. ‘ஆப்ஷோர்’ அக் கவுண்ட்கள் மூலம் (வெளிநாட்டு கணக்குகள்) பல்வேறு முறைகேடுகள் செய்து செயற்கையாக பங்கு விலை யை உயர்த்தி அதானி பங்குகளை  நாசர் அலி, சாங் சங்-லிங் வாங்கியுள்ள னர்’’ என விவரிக்கப்பட்டுள்ளது.

கறுப்புப் பணத்தில்  லாபம் பார்த்த அதானி 

உலகில் ஒரு சில நாடுகள், அந்நாட்  டில் முதலீடு செய்பவர்களின் பின்னணி குறித்து ஆராயாமல் முதலீடுகளைப் பெற்று அவர்கள் செய்யும் முதலீட் டிற்கு வரிச்சலுகைகளையும் அளித்து  வருகிறது. இது கறுப்புப் பண பரி வர்த்தனைக்கு உதவும் ஒரு வழிமுறை.  இதுபோன்ற செயல்திட்டங்களில் அதானி ஈடுபட்டு வருவதாக அதானி  நிறுவனத்தின் சில மின்னஞ்சல்களிலி ருந்தும் பல ஆய்வுகளை மேற்கோள்  காட்டி ஓசிசிஆர்பி தனது அறிக்கை யில் கூறியுள்ளது.

அதானி கொடுத்த பணமா?

‘‘நாசர் அலி - சாங் முதலீடு செய்த  பணம் அதானி குடும்பத்தால் கொடுக்  கப்பட்டது என்பதற்கான எந்த ஆதா ரமும் இல்லை என்றாலும், அதானி குழு மத்தில் செய்யப்பட்டுள்ள அவர்களது முதலீடு அதானி குடும்பத்துடன் இணக்கமாக இருந்து செய்யப்பட்டது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது’’  என ஒசிசிஆர்பி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

உரிமையாளர்கள் அடையாளம் காணப்படுவது முதல் முறை

கடந்த ஜனவரி 24இல் ‘‘கார்ப்பரேட்  வரலாற்றில் மிகப்பெரிய புற்றுநோய்’’ என்ற தலைப்பில் அதானி குழும முறைகேடுகளை வெளியிட்டது அமெ ரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் வணிக ஆராய்ச்சி நிறுவனம். ஹிண்டன்பர்க் அறிக்கையில் வரிவிகி தம் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் போலி ‘ஷெல்’ கம்பெனிகளைத் தொடங்கி (வெறும் லெட்டர் பேடு கம்பெனிகள்) அவற்றின் மூலமாக அதானி குழுமத்தில் முதலீடுகளை மேற்கொண்டு பங்கு மதிப்புகளை உயர்த்தியதாகவும், பிறகு வங்கிகளில் பெருமளவு கடன்களை வாங்கி முறை கேடான பரிவர்த்தனைகளை மேற்  கொண்டதாகவும் அம்பலப்படுத்தப் பட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையால்  அதானியின் பங்குகள் ஆட்டம் கண்  டது. அதானியின் பங்குகள் மொத்தமாக  ரூ.13 லட்சம் கோடி அளவுக்கு இழப்பைச் சந்தித்தன. இதனால், அதானியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்திலிருந்து 30-ஆம்  இடத்துக்குத் தள்ளப்பட்டார். ஆனால் ஹிண்டன்பர்க் அறிக்கையில் முறை கேடுகளை மட்டுமே குறிப்பிடப்பட்ட நிலையில், ஒசிசிஆர்பி அறிக்கையில், அதானி பங்குகளின் சர்ச்சைக்குரிய உரிமையாளர்கள் பெயரும், அதற்கான  விபரங்களையும் கொடுக்கப்பட்டுள் ளன. அதானி முறைகேடு விவகாரத்தில்  உரிமையாளர்கள் அடையாளம் காணப்படுவது இதுவே முதல் முறை யாகும்.

தொகுப்பு: எம்.சதீஸ்குமார்

 

மோடி பிரதமரானதும் அதானி காட்டில் பணமழை

பிரதமர் மோடி பிரதமர் பதவியில் அமருவதற்கு முன்பு, அதாவது 2013-இல் அதானி குழும நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 800 கோடி டாலராக (ரூ.66,120 கோடி) இருந்தது. மோடி பிரதமர் ஆன பின் முறைகேடான முதலீடுகள் காரணமாக 2022-இல் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 28,800 கோடி டாலராக (ரூ.28,80,334 கோடி) உயர்ந்தது. மோடி பிரதமரானதும் அதானி காட்டில் பணமழை பொழிந்துள்ளது என ஓசிசிஆர்பி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி ஆதரவே  ஊழலின் அடிப்படை

அதானி நிறுவன முறைகேடு பற்றி 2014 ஜனவரியில் நட வடிக்கை தொடங்கிய பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான ‘செபி’, மோடி பிரதமரானதும் அதனை கைவிட்ட தாக ஓசிசிஆர்பி புகார் தெரிவித்துள்ளது. மேலும் குஜராத்தின் முதல்வராக இருந்த காலத்திலிருந்தே கவுதம் அதானியுடன் மோடிக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. மோடி பிரத மரானதும் அதானி குழுமத்துக்கு விதிகளை மீறி சலுகைகள் காட்டப்பட்டது. மோடி ஆதரவு காரணமாக துறைமுகங்கள், மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவை அதானி குழு மத்துக்கு வழங்கப்பட்டன. நிலக்கரி சுரங்கங்கள், நெடுஞ்சாலை  பணிகள், விமான நிலைய ஒப்பந்தங்களை மோடி ஆதரவால் பெற்றது அதானி குழுமம் என ஓசிசிஆர்பி நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

கடும் சரிவில் அதானி குழுமத்தின் பங்குகள்

ஒசிசிஆர்பி அறிக்கையை அடுத்து பங்குச் சந்தை யில் அதானி குழும பங்குகள் பலத்த அடிவாங்கி யுள்ளது. பட்டியலிடப்பட்ட 10 அதானி குழும நிறுவனங்க ளின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு புதனன்று ரூ.10,84,668.73 கோடியிலிருந்து ரூ.35,624 கோடி குறைந்து ரூ.10,49,044.72 கோடியாக ஆனது. அதானி எண்டர்பிரைசஸின் சந்தை மதிப்பு ரூ.9,570.31 கோடியாக வும், அதானி கிரீன் எனர்ஜியின் மதிப்பு ரூ.6,200 கோடி யாகவும் குறைந்துள்ளது. அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி பவர் ஆகியவற்றின் சந்தை மதிப்பு ரூ.5,000-5,300 கோடி அளவுக்கு குறைந்துள்ளன. அதானி எனர்ஜி  சொல்யூஷன்ஸ் கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி குறைந்துள்ளது. 

யெச்சூரி கோரிக்கை

அதானி குழும முறைகேட்டின் அடுத்த கட்ட அறிக்கையாக பார்க்கப்படும் ஓசிசிஆர்பி தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘அதானி விவகாரத்தில் புதிய ஆதாரங்கள் தீவிர விசாரணை தேவை; இந்த விஷயத்தை கைப்பற்றிய உச்சநீதிமன்றம் மூடிமறைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளார்.