புதுதில்லி, நவ. 14 - தலைநகர் தில்லியில் காற்றின் தரக் குறியீடு 428 என்ற தீவிரமான மாசுபாட்டை எட்டியுள்ளது. பொதுமக்கள் கடும் சுவாசப் பிரச்சனை களுக்கு உள்ளாகியுள்ளனர். காற்று மாசுவுடன் மூடு பனியும் சூழ்ந்துள்ளதால் தில்லியில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உ.பி., பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடை முடிந்த பின் எரிக்கப்படும் பயிர்க்கழிவுகள் மூலம் வெளியாகும் புகையால் நீண்டகாலமாகவே, தில்லி காற்று மாசுபாட்டை எதிர்கொண்டு வருகிறது. இத்துடன், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது வெடிக்கப்படும் பட்டாசு புகை, தில்லியின் சுகாதாரத்தையே மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது.
அந்த வகையில், தீபாவளி பண்டிகை யன்று வெடிக்கப்பட்ட பட்டாசு புகையால் 14 நாட்களுக்குப் பிறகும் தில்லி கடுமையான காற்று மாசுவை எதிர்கொண்டு வருகிறது. மத்திய காற்று மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தரவுகளின்படி, தில்லியில் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் காற்றின் தர குறியீடு (AQI) 428 ஆக பதிவாகியுள்ளது. பொதுவாக காற்றின் தரக் குறியீடு 50-க்குள் இருப்பது சுகாதாரமான சூழலுக்கான அறிகுறியாகும். 51 மற்றும் 100க்கு இடைப்பட்ட அளவு திருப்திகரமானது. 101 மற்றும் 200 அளவானது மிதமான காற்று மாசுபாடாக எடுத்துக்கொள்ளப்படும். 201 மற்றும் 300-க்கும் இடையே இருப்பது மோச மான காற்றுத் தர குறியீடாகும். 301 மற்றும் 400 (AQI) வரை என்ற அளவானது மிகவும் மோசமான காற்று மாசு குறியீடாகும். இந்நிலையில், 428 (AQI) என்ற அள விற்கான மோசமான காற்று மாசுவால் தில்லி மக்கள் கடுமையான சுவாசப் பிரச்சனை களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருமல், மூச்சுத் திணறல், பார்வைக் குறைபாடு களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே, காற்று மாசுவில் உள்ள PM2.5 நுண்ணிய துகள்கள் நுரையீரல் புற்றுநோய்க்கு வழி வகுக்கும் என்று ராஜீவ் காந்தி கேன்சர் இன்ஸ்டிடியூட் மற்றும் ரிசர்ச் சென்டரின் தலைவரான எல்.எம் டார்லாங் அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார். “காற்று மாசுவில் உள்ள நுண்ணிய துகள்கள் நுரையீரல் செல்களில் பிறழ்வு களைத் தூண்டி, கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்; நுரையீரல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது முக்கியமானது; ஆனால், இந்த பிரச்சனை யை நோயாளிகள் முன்கூட்டியே அறிய மாட்டார்கள்; நோய் தீவிரமான பிறகே தொடர்ச்சியான இருமல் அல்லது சளியில் இரத்தம் போன்ற அறிகுறிகள் தென்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
“இதனிடையே, வியாழனன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், “இந்த மோசமான நிலைக்கு காற்று குறைந்ததும், வெப்பநிலை வீழ்ச்சியுமே காரணம். நாளைக்கு நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ‘தரப்படுத்தப்பட்ட செயல் திட்டம் நிலை - 3’ (GRAP III) இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஆய்வுகளின் படி தில்லியின் மாசுவுக்கு சுற்றியுள்ள பகுதிகள் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்கின்றன. 30 சதவிகித மாசு உள்ளூர் மூலங்களில் இருந்தும், 34 சதவிகிதம் தேசிய தலைநகர் பகுதியில் இருந்தும் உண்டாகிறது. காற்றின் தரம் மேலும் மோசமடைவதை தடுக்க ‘தரப்படுத்தப்பட்ட செயல் திட்டம் நிலை - 2’ (GRAP 2)-இன் கீழ் நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்தும். மாசுபாட்டி னை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும் பிரச்சாரங்களையும் நாங்கள் வலுப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.