states

img

கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மறுநாளே தேர்வெழுதினார்

கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மறுநாளே தேர்வெழுதினார்

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பாதுகாப்பு இல்லாத சூழலிலும்

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்க ளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் மிக மோசமான அள வில் அதிகரித்து வருகிறது. இது நாடறிந்த விஷயம் தான் என்ற நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய சிறுமி ஒருவர் மறுநாளே தேர்வெழுதிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலாவர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு திரு மண நிகழ்வுக்குச் சென்ற 11ஆம் வகுப்பு சிறுமி ஒருவரை, அருகிலிருந்த வயல்வெளிக்கு 9 பேர் அடங்கிய கும்பல் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்தது. மயக்கம் தெளிந்த பின்பு பாலியல் வன்கொடுமை செய்ததை புதன் கிழமை அன்று அதிகாலை பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார்.  சிறுமிக்கு வியாழக்கிழமை அன்று தேர்வு நடைபெறவிருந்ததால், தேர்வு நேரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென் றால், கல்வி பாதிக்கப்படும் என்று கருதிய சிறு மியின் பெற்றோர், அவருக்கு ஆறுதல் கூறியும், சமாதானப்படுத்தியும் தேர்வெழுத வற்புறுத்தி னர். சிறுமியும் தைரியமாக தேர்வு எழுதினார். தொடர்ந்து கும்பல் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை அன்று காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து, காவல்துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதே ஊரைச் சேர்ந்தவர் 9 பேரையும் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 9 பேரில் ஒருவன் சிறுவன் என்ற நிலையில், அவனை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், மீதமுள்ள 8 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.