புதுதில்லி, ஜூலை 28- மன்னராட்சி காலத்தில் கூட பெண்கள் தாக்கப்படக்கூடாது என்ற நெறிமுறை இருந்ததாக வும், ஆனால், வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை கடுமையாக நடந்து கொள்வ தாகவும் காங்கிரஸ் மூத்த தலை வர் குலாம் நபி ஆசாத் வருத்தம் தெரிவித்துள்ளார். ‘நேசனல் ஹெரால்டு’ பத்தி ரிகை தொடர்புடைய ‘அசோசி யேட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் பங்குகளை ‘யங் இந்தியா’ நிறு வனத்திற்கு மாற்றியதில் முறை கேடு நடந்திருப்பதாக பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி எழுப்பிய குற்றச்சாட்டின் அடிப் படையில், காங்கிரஸ் தலைவர் கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதி ராக அமலாக்கத்துறை விசா ரணை நடத்தி வருகிறது. ஏற்கெ னவே, ராகுல் காந்தியை நேரில் வரவழைத்து 48 மணி நேரத் திற்கும் மேலாக அவரிடம் அம லாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து தற் போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிட மும் மூன்று நாட்களாக 11 மணி நேரத்திற்கும் மேலாக அம லாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். சோனியா காந்தி நோய்வாய்ப்பட்டவர் என்ப தைக் கூட கருத்தில் கொள்ளா மல் அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங் களை வைத்துள்ளன.
காங்கிரஸ் கட்சியினரும் கடந்த சில நாட்களாக நாடு முழு வதும் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து 2 நாட்களாக குடிய ரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்திக் கைதா கினர். இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் தில்லி யில் கூட்டாக செய்தியாளர் களை சந்தித்தனர். அப்போது பேசுகையிலேயே குலாம் நபி ஆசாத் அமலாக்கத்துறை நட வடிக்கையை விமர்சித்துள்ளார். “ராகுல் காந்தியிடம் ஏற்க னவே 50 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப் பட்ட நேசனல் ஹெரால்டு வழக் கில் சோனியா காந்தியை மீண் டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தும் முன் அமலாக் கத்துறை அவரது வயது மற்றும் உடல்நிலையை மனதில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைவர் வயதானவர். உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டி ருப்பவர். விசாரணை அமைப்பு களின் அழுத்தத்தை அவரால் தாங்க முடியாது. போர்களில் கூட, பெண்கள் தாக்கப்படக் கூடாது, உடல்நிலை சரியில்லா தவர்களை விட்டுவிட வேண்டும் என்று மன்னர்கள் உத்தரவு களை வழங்கினர். எனவே, வயதான மற்றும் நோய்வாய்ப் பட்ட சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை கடுமையாக நடந்து கொள்வது கூடாது” என்று தெரிவித்துள்ளார்.