புதுதில்லி, நவ. 16 - அதானி குழுமம், என்டிடிவி-யின் ஊடகத்தின் 26 சதவிகித பங்குகளை திறந்த சலுகை மூலம் வாங்குவதற்கு பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான ‘செபி’ ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே என்டிடிவி குழுமத்தின் 29.18 சதவிகித பங்குகளை மறை முகமாக அதானி குழுமம் கைப்பற்றி விட்டது. செபி-யின் தற்போதைய அனு மதியால், என்டிடிவி முழுமையாகவே அதானி வசம் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பிரபல என்டிடிவி நிறுவனத்தின் 29.18 சதவிகித பங்குகளை வாங்கி யுள்ளதாகவும், ஓப்பன் ஆபர் மூலம் என்டிடிவி நிறுவனத்தின் மேலும் 26 சதவிகித பங்குகளை வாங்க இருப்ப தாகவும், அதானி குழுமத்தின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் நிறுவனம் (AMG Media Networks Ltd) கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி அறிவித்தது. ஆனால், தங்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையோ, கலந்தாலோச னையோ இல்லாமல் என்டிடிவி பங்கு களை அதானி நிறுவனம் வாங்கியுள்ள தாக என்டிடிவி நிறுவனர்கள் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் குற்றம்சாட்டினர். அப்போது, விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (VCPL) நிறுவனத்தை ரூ. 113 கோடியே 74 லட்சத்திற்கு விலைக்கு வாங்கிய தன் மூலமாக- அந்த நிறுவனத்திடம் இருந்த என்டிடிவி-யின் 29.18 சதவிகித பங்குகள் தானாகவே தங்கள் வசம் வந்துவிட்டதாக அதானி குழுமம் பதிலளித்தது.
என்டிடிவி நிறுவனத்தின் 61.45 சத விகித பங்குகள், அதன் நிறுவனர் களான ராதிகா ராய், பிரணாய் ராய் வசமே இருந்தன. இதில், 29.18 சத விகித பங்குகள், தனியாக ராதிகா ராய், பிரணாய் ராய்க்குச் சொந்தமான ஆர்ஆர்பிஆர் ஹோல்டிக் பிரைவேட் லிமிடெட் (RRPR Holding Private Limited) வசம் இருந்தன. இது என்டிடிவி-யின் விளம்பரதாரர் குழு நிறுவனமாகும். இந்த ஆர்ஆர்பிஆர் நிறுவனம், விஸ்வ பிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (VCPL) நிறுவனத்திடம் ரூ. 403 கோடியே 85 லட்சம் கடன் வாங்கி யிருந்தது. அப்போது, கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், ஆர்ஆர்பிஆர் நிறுவனம் வசமிருக்கும் என்டிடிவி-யின் 29.18 சதவிகித பங்குகள் விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (VCPL) நிறுவனத்திற்கு தானாகவே மாறிவிடும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், விசிபிஎல் நிறு வனத்தை அதானியின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் லிமிடெட் (AMG Media Networks Ltd) நிறுவனம் ரூ. 113 கோடியே 74 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியதன் மூலம் - அந்த நிறு வனத்தின் வசமிருந்த என்டிடிவி-யின் 29.18 சதவிகித பங்குகளும் தானாகவே அதானி கைகளுக்குச் சென்றன.
அத்துடன் நிற்காத அதானி குழுமம், 29.18 சதவிகித பங்குகள் போக என்டிடிவி-யின் 38.55 சதவிகித பொதுப்பங்குகளிலும் 26 சதவிகித பங்குகளை விலைக்கு வாங்கப் போவதாக அறிவித்தது. ஆனால், ஒரு நிறுவனத்தின் பங்கு களை பங்குதாரர்களின் விருப்ப மின்றி வாங்கும் செயல் ‘முறையற்ற கையகப்படுத்துதல்’ (Hostile Takeover) என்று என்டிடிவி நிர்வாகம் கூறியது. “தொலைக்காட்சி நிறுவனர் களின் ஒப்புதல் ஏதுமின்றி பங்குகள் மாற்றப்பட்டு இருக்கின்றன. விசிபிஎல் நிறுவனம் எங்களிடம் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் எங்களின் இதயமான ஊடகத்துறையில் எதை யும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். நாங்கள் பத்திரிகை துறைக்காக பெருமையுடன் நிற்போம். 61 சதவிகித பங்குகள் எங்கள் வசமே இருக்கின்றன” என்று தெரிவித்தது.
இந்நிலையில்தான், என்டிடிவி-யின் ஊடகத்தின் 26 சதவிகித பங்கு களை திறந்த சலுகை மூலம் வாங்கு வதற்கு பங்குச் சந்தை கட்டுப்பாட்டாள ரான ‘செபி’ தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அனுமதி அதா னிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதன்மூலம் 55 சதவிகித பங்குகளு டன் என்டிடிவி ஊடகத்தையே முழுமை யாக அதானி குழுமம் கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான ஓபன் ஆபர் நவம்பர் 22-இல் துவங்கி டிசம்பர் 5 வரை நடைபெறுகிறது. என்டி டிவி-யின் பங்கு ஒன்று ரூ. 383 ஆக விற்ப னையாகி வரும் நிலையில், 1 கோடியே 67 லட்சம் என்டிடிவி பங்கு களை, அதானி குழுமம் வாங்கப் போகிறது. என்டிடிவி (New Delhi Television Limited -NDTV) என்பது, இந்தியாவின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாகும். 30 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ், என்டிடிவி 24x7, என்டிடிவி இந்தியா, என்டிடிவி பிராஃபிட் ஆகிய 3 சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 230 கோடியே 91 லட்சம் வருமானம் மற் றும் ரூ.59 கோடியே 19 லட்சம் நிகர லாபம் பெற்று இயங்கி வருகிறது. இதனைத்தான் அதானி தற்போது கைப்பற்றியுள்ளார். கடந்த ஆண்டு, குவிண்டிலியன் பிசினஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் (Quintillion Business Media Pvt Ltd -QBM) என்ற டிஜிட்டல் வணிக செய்தித் தளத்தையும் அதானி விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.