states

img

கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட மகாராஷ்டிர பத்திரிகையாளர்!

மும்பை, பிப். 10 - ரவுடிக்கும் பாஜக தலைவர் களுக்கும் தொடர்பை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் காரை ஏற்றிப் படுகொலை செய்யப் பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய மூன்று பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறு வனங்கள் ரத்னகிரி ரிஃபைனரி & பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் (RRPCL) சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது முதலில் ரத்னகிரி மாவட்டத்தின் நானார் கிராமத்தில் திட்டமிடப்பட்டது. உள்ளூர் மக்கள்  மற்றும் சிவசேனாவின் எதிர்ப்பு காரண மாக அத்திட்டம் கைவிடப்பட்டது. முதல் வராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே, நானாரில் ஆர்ஆர்பிசிஎல் திட்டம் அமை யாது என உறுதிபட அறிவித்தார். இதையடுத்து, இந்த திட்டத்திற்கு கொங்கன் பகுதியிலுள்ள பார்சு-சோல்கான் பகுதியில் மாற்று இடம் இறுதி செய்யப்பட்டது. ஆனால், அங்கும் பிரச்சனை உருவானது. இந்த  சுத்திகரிப்பு திட்டத்தால் சுற்றுச்சூழ லுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயத்தை நம்பியிருக்கும் மற்றும்  அல்போன்சா மாம்பழத்திற்கு புகழ்பெற்ற இப்பகுதி மாசு மற்றும் அழிவுக்கு உள்ளாகும் என்று கிராம மக்களும், உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்த னர். தற்போது அவர்கள் போராட்ட மும் நடத்தி வருகின்றனர். இதுஒருபுறமிருக்க, பண்டரிநாத் அம்பேர்கர் (42) என்பவர் போராடும்  மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கை யில் ஈடுபட்டு வந்துள்ளார். சுத்தி கரிப்பு நிலையத்தின் ஆதரவாளர் என மக்களால் குற்றம் சாட்டப்படும் இவர், நிலத்தரகர் என்றும், சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்க்கும் உள்ளூர் மக்க ளை அச்சுறுத்தியதற்காக இவர்மீது எப்ஐஆர்-களும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தச் சூழலில், சசிகாந்த் வாரிஷே (48) என்ற பத்திரிகையாளர், ஆர்ஆர்பிசிஎல் சுத்திகரிப்பு நிறுவனம் குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்வைக்கும் கருத்துக்களையும், பொதுமக்களின் போராட்டங்களையும்  தொடர்ச்சியாக ஊடகம் மூலமாக வெளியிட்டு வந்துள்ளார். மகாரா ஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டம் ராஜா பூர் பகுதியைச் சேர்ந்தவரான சசி காந்த் வாரிஷே, உள்ளூர் மராத்தி  செய்தித்தாள் ஒன்றில் பணியாற்றுபவர் ஆவார்.  அந்த வகையில், சமீபத்திலும் கட்டுரை ஒன்றை வெளியிட்ட சசிகாந்த்  வாரிஷே, அதில், பொதுமக்களை மிரட்டும் பண்டரிநாத் அம்பேர்கர், ‘பிரத மர் நரேந்திர மோடி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோ ருடன் இருக்கும் புகைப்படத்தை  வெளியிட்டு, அம்பேர்கரின் பின்னணி யை அம்பலப்படுத்தியுள்ளார். இது போராடும் மக்களிடையே பாஜக-வின் முகத்திரையைக் கிழிப்பதாக இருந்துள்ளது. இந்நிலையில்தான், திங்கட்கிழ மையன்று ராஜாபூர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பம்ப் அருகே வாரிஷே நின்று கொண்டிருந்தபோது, ​அவர் மீது ​அம்பேர்கர் தனது எஸ்யூவி காரை ஏற்றியுள்ளார். காரின் சக்கரம் அடியில் சிக்கிக்கொண்டு, பல மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட வாரிஷே, மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க் கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி பண்டரிநாத் அம்பேர்கரை போலீசார் தற்போது கைது செய்துள்ள னர். அவரைப் போலீஸ் காவலிலும் எடுத்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இதனிடையே, இந்த சம்பவம் தற்செயலானது அல்ல; திட்டமிட்டப் படுகொலை.  சுத்திகரிப்பு ஆலைக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் மீது  ஏற்கெனவே இதுபோன்ற தாக்குதல் களை நடத்திய வரலாறு அம்பேர் கருக்கு இருப்பதாகவும், அவருக்கு எதிராக பல எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி யுள்ளார். படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் சசிகாந்த் வாரிஷே-வுக்கு வயதான தாய், மனைவி மற்றும் 19 வயது மகன் உள்ளனர்.