உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுகளின் அடிப்படையில், “தேர்தல் பத்திரத்தை வாங்கியவர்களின் பெயர், எவ்வளவு நன்கொடை அளிக்கப்பட்டது. தேர்தல் பத்திரத்தின் சிறப்பு எண்கள், பத்திரங்களை பணமாக்கிய கட்சிகளின் பெயர்கள், அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கு எண்களின் கடைசி நான்கு இலக்கங்கள், தேர்தல் பத்திரம் மூலம் எவ்வளவு நன்கொடை பெறப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது” என்று எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. “சைபர் பாதுகாப்பு காரணமாக முழு வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் கேஒய்சி விவரங்கள் வெளியிடப்படவில்லை. நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளை அடையாளம் காண இந்த விவரங்கள் அவசியமில்லை” எனவும் பிரமாண பத்திரத்தில் எஸ்பிஐ வங்கி குறிப்பிட்டுள்ளது. துச்செயலாளர் கனிமொழி கருணாநிதி விமர்சித்துள்ளார்.