போகல்லா (மத்தியப்பிரதேசம்), மார்ச் 8- நிலமற்றவர்களுக்கு நிலம், வீடற்றவர்களுக்கு வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவாவில் உள்ள டபௌரா அருகே போகல்லாவில் இருந்து செவ்வாயன்று காலை 90 கி.மீ தூர நடைபயணம் தொடங்கியது. நடைபயணத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராம்நாராயண் குராரியா, காந்திகுமார் திவேதி ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அமித் சோகவுரா, விவசாயிகள் சங்கத் தலைவர் ரோஹித் திவாரி உட்பட ஏராளமானோர் நடையணத்தில் பங்கேற்றுள்ளனர். பயணக்குழு ரேவாவில் மார்ச் 9-ஆம் தேதி நிறைவடைகிறது.