states

img

ஹோமியோபதி சத்துபானத்தை “சர்பத் ஜிகாத்” எனக் கூறிய போலிச்சாமியார் ராம்தேவ்

ஹோமியோபதி சத்துபானத்தை  “சர்பத் ஜிகாத்” எனக் கூறிய போலிச்சாமியார் ராம்தேவ்

தில்லி உயர்நீதிமன்றம் கண்டனம்

மோடி பிரதமர் ஆனதும் ஒன்றிய பாஜக அரசிடம் பல்வேறு சலு கைகளை பெற்று பதஞ்சலி என்ற நிறுவனத்தை பிரபலப்படுத்தினார் போலிச்சாமியார் பாபா ராம்தேவ்.  பதஞ்சலி நிறுவனம் தற்போது ஆயுர்வேத மருந்து, சோப்புகள்,தேன் என பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வரு கிறது. தாங்கள் தயாரிக்கும் அனை த்துப் பொருட்களும் மருத்துவக் குணமிக்கது என்று கூறி விற்பனை செய்தாலும், இன்றுவரை பதஞ்சலி நிறுவனம் பிரபலமடையவில்லை. கார ணம் பதஞ்சலி பொருட்களை ஒரு  பொருளாகக் கூட மக்கள் மதிக்க வில்லை.  குறிப்பாக பதஞ்சலி தயாரிப்பு போலி யானது, தரமற்றது எனக் கூறி பாஜக ஆளும் உத்தரகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்தன. உணவுப் பாதுகாப்புத் துறையும் பதஞ்சலி பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை இறுக்கியது. இத னால் தனது தயாரிப்புகளை பிரபலப் படுத்த ராம்தேவ் அலோபதி (ஆங்கில மருத்துவம்) மருந்துகளின் தன்மை குறித்துசர்ச்சைக்குரிய வகையில் விமர் சித்தார்.

உச்சநீதிமன்றம் குட்டு

இதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது. குறிப்பாக உச்சநீதி மன்றம், கேரள நீதிமன்றம் ஆகியவை ராம்தேவ் மற்றும்பதஞ்சலி இணை இயக்குனர் ஆச்சார்யா ஆகியோருக்கு எதிராக சாட்டையை சுழற்றியது. உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கடிதம் கொடுத்து, சிறிது காலம் தலை மறைவாக இருந்த ராம்தேவ் தற்போது ஹோமியோபதி மருந்தை குறிவைத்து வன்மத்தை கக்கியுள்ளார்.

சர்பத் ஜிகாத்

அலோபதி போன்றே ஹோமி யோபதி மருந்தும் உலகளவில் முக் கிய மருத்துவப் பொருளாகும். இத்தகைய சூழலில் ஹம்தார்ட் லேப் என்ற ஹோமியோபதி மருந்து நிறுவனம் “ரூஹ் அப்சா” என்ற சத்துபானத்தை தயாரித்து விற்று வரு கிறது. இந்திய அளவில் இது பிரபல ஊட்டச்சத்து பொருளாக உள்ளது.  இந்நிலையில், “அப்சா பானம் விற்பனை மூலம் வரும் லாபத்தை மசூதியும் மதரசாவும் கட்டவே பயன்படுத்துவார்கள். இது லவ் ஜிகாத் போன்றது” என்று கூறி ஏப் ரல் 3ஆம் தேதி பதஞ்சலி நிறுவன “குலாப் சர்பத்திற்கு” ஆதரவாக வீடியோ வெளியிட்டு அவதூறு பரப்பியுள்ளார் ராம்தேவ்.  ராம்தேவின் இந்த அவதூறு விளம்ப ரத்தை எதிர்த்து ஹம்டாட்லேப் நிறுவனம் தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்தவழக்கு திங்களன்று விசாரணைக்கு  தில்லி நீதிமன்ற நீதிபதி அமித் பன்சால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தில்லி நீதிபதி எச்சரிக்கை

இரு தரப்பு வாதத்திற்கு பிறகு தொடர்ந்து வீடியோவை பார்த்த பின்பு நீதிபதி அமித் பன்சால்,”வீடியோவைப் பார்த்த போது என் கண்களையும் காது களையும் என்னால் நம்ப முடிய வில்லை. எந்த வகையில் இவ்வாறு கூறப் பட்டது. ஆச்சர்யமாக உள்ளது.பதஞ்சலி நிறுவனரின் கருத்துக்கள் நியாயப்படுத்த முடியாதவை. நீதி மன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக் குள்ளாக்குகிறது. இது கண்டனத்துக் குரியது. இதுதொடர்பாக நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடும்”என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 1ஆம் தேதி நடத்தப் படும் என தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி அமித் பன்சால் உத்தரவிட்டுள்ளார்.