states

img

சேலையில் தூக்குமாட்டி பழங்குடி பெண்கள் ஆந்திராவில் போராட்டம்!

விஜயவாடா, ஏப்.9- ஆந்திர மாநிலத்தில் உள்ள உரவக்கொண்டா பகுதியில் பழங்குடி விவ சாயப் பெண்கள் கழுத்தில் தங்களின் சேலைகளை தூக் குக் கயிறாகக் கட்டி போராட் டம் நடத்தியுள்ளனர். ஆந்திராவின் அனகபள்ளி மாவட்டம் முதுகுலா மண்ட லத்தில் உள்ள உரவக்கொண்டா பகுதியில் பழங்குடி மக்கள் முந்திரி விளைவித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த இடத்தில் சுரங்க வேலை செய்ய ஒரு கிரானைட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், இதற்காக மக்களின் கருத்தைக் கேட்காமலேயே வலுக்கட்டாயமாக அவர்களின் நிலங்களைப் பறித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தே தற்போது உரவக்கொண்டா பகுதி பழங்குடி மக்கள் கழுத்தில் தூக்குமாட்டிக் கொள்ளும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.  “முந்திரி தோட்டங்களை மட்டுமே நம்பியிருக்கும் தங்களின் வாழ்வாதாரத்தை அரசு அழிக்கிறது. கிரானைட் நிறுவனங்கள் எங்கள் விளைநிலங்களை அழித்து, அதில் சாலை போட முயற்சிக்கின்றன. இதற்கு வருவாய் அலு வலர்கள் துணை போகின்றனர். ஜேசிபி இயந்திரம் மூலம் எங்கள் பயிர்களை அழிக்கப் பார்க்கின்றனர். கிரானைட் நிறுவனம் எங்களுக்கு பணம் ஏதும் தரவில்லை. சிலர் சட்ட விரோதமான முறையில் பணத்திற்காக எங்கள் நிலங்களை அபகரிக்கின்றனர். எனவே, எங்களின் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் சாவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.