புதுதில்லி, செப்.13- அதானி குழுமத்தின் முன்னாள் ஒப்பந்ததாரரான அஜய் குமார் அகர்வால், உச்சநீதிமன்றத்தில், மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், அதானி குழும பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக, ‘செபி’ (SEBI) மேற்கொண்டுவரும் விசாரணையில், தன்னை ஒரு சாட்சியமாக இணைத்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இபிபிஎல் வென்ச்சர்ஸின் என்ற நிறுவனத்தின் இயக் குநர் என்ற வகையில், அதானி குழும நிறுவனத்துடன் ஒப் பந்ததாரராக பணிபுரிந்துள்ளதாக வும், அதானி குழுமத்தின் நிதி பரி மாற்ற முறைகேடுகள் குறித்து தனக்கு மிக நன்றாகவே தெரியும் என்றும் அஜய்குமார் அகர்வால் உச்ச நீதிமன்றத்திடம் கூறியுள்ளார். இது அதானி குழுமம் மீதான ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி பங் குச்சந்தை ஊழல் குற்றச்சாட்டுக் களுக்கு மேலும் வலு சேர்ப்பதாக வும், புதிய திருப்பமாகவும் அமைந் துள்ளது.
அதானியை காப்பாற்ற முயற்சிக்கும் ‘செபி’
ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அதானி குழுமத் தின் 24 சந்தேகத்திற்குரிய பரி மாற்றங்களில் 22 பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய இந்திய பங்குகள் மற்றும் பரி வர்த்தனை வாரியமான ‘செபி’ (SEBI), தனது அறிக்கையை ஆகஸ்ட் 25 அன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசின் கட் டுப்பாட்டிலுள்ள ‘செபி’, அதானி குழுமத்தின் -அபராதம் விதிக்கக் கூடிய அளவிலான- சிறிய முறை கேடுகளையே கண்டுபிடித்துள்ள தாகவும், அதானி குழுமத்தைக் காப் பாற்ற முயற்சிப்பதாகவும் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக, மனுதாரர் களில் ஒருவரான அனாமிகா ஜெய்ஸ்வால், கடந்த செப்டம்பர் 8 அன்று புதிய பிரமாணப் பத்திரம் ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக் கல் செய்தார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டம் (OCCRP) எனப்படும், 6 கண்டங்களில் செயல்படும் உலக ளாவிய புலனாய்வு ஊடகம், ‘தி கார்டியன்’, ‘ராய்ட்டர்ஸ்’ போன்ற சர்வதேச ஊடகங்களில் வெளி யான செய்திகளின் அடிப்படை யில், இந்த பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருக்கும் அவர், அதானி குழுமத்தின் பங்கு பரி மாற்ற முறைகேடுகள் தொடர்பான அடுக்கடுக்கான ஆதாரங்களை உச்சநீதிமன்றத்திடம் முன்வைத் துள்ளார்.
குறிப்பாக, அதானி குழுமத்தின் நிதி கையாளுதல்கள் குறித்து, 2014-ஆம் ஆண்டில் வருவாய் புல னாய்வு இயக்குநரகம் (Directorate of Revenue Intelligence - DRI) விடுத்திருந்த எச்சரிக்கை உள் ளிட்ட பல தகவல்களை ‘செபி’ மறைத் திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது அதானி விவகாரத்தில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த பரபரப்பு அடங்குவதற்கு உள்ளாகவே, இந்த வழக்கில் மற்றுமொரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் முன்னாள் ஒப்பந்ததாரர்களில் ஒருவரும், இபிபிஎல் வென்ச்சர்ஸின் (EBPL Ventures) இயக்குநருமான அஜய் குமார் அகர்வால், அதானியின் பங்கு பரிமாற்ற ஊழல் குறித்து தனக்கு நன்றாகத் தெரியும்; அந்த ஊழல் முறைகேடுகளை நேரிலேயே கண்டுள்ளேன்; எனவே, ‘செபி’ மேற்கொண்டு வரும் விசாரணை தொடர்பான வழக்கில் தன்னையும் ஒரு சாட்சி யாக (Interested Party) இணைத் துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஒன்றிய அரசின் கீழுள்ள பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான நிறுவனத்திடமிருந்து (Engineering, Procurement and Construction - EPC), சத்தீஸ் கர் மாநிலத்தில், சர்குஜா ரயில் பாதைப் பணிகளை அமைப்பதற் கான ஒப்பந்தத்தை அதானி குழு மம் பெற்றது. இந்தப் பணிகளை நிறைவேற்ற ‘சர்குஜா ரயில் காரி டார் பிரைவேட் லிமிடெட்’ (SRCPL) என்ற புதிய நிறுவனத்தையே அதானி குழுமம் உருவாக்கியது. இந்த எஸ்ஆர்சிபிஎல் நிறு வனத்திற்கு, துணை நிறுவனமாக இபிபிஎல் வென்ச்சர்ஸின் (EBPL Ventures) சேர்த்துக் கொள்ளப் பட்டது. சர்குஜா ரயில் பாதையின் எலக்ட்ரிக்கல் வேலைகளை முடித் துத் தருவது இபிபிஎல் நிறுவனத் திற்கு வழங்கப்பட்ட பணியாகும். இந்த இபிபிஎல் நிறுவனத்தின் இயக்குநர்தான் அஜய்குமார் அகர் வால் ஆவார்.
அவ்வாறு எஸ்ஆர்சிபிஎல் நிறு வனத்திற்காக, இபிபிஎல் சார்பில் பணியாற்றிய போதுதான் அதானி குழுமத்தின் நடவடிக்கைகளை அஜய்குமார் அகர்வால் நெருக்க மாக கவனித்ததாகவும், அதானி குழுமத்தின் ஒரு நிறுவனத்திலி ருந்து மற்றொரு துணை நிறுவ னத்திற்கான பணப்பரிமாற்றங் களை நேரில் கண்டதாகவும் தெரி வித்துள்ளார். சர்குஜா ரயில் பாதை பணி களுக்காக துவங்கப்பட்ட எஸ்ஆர் சிபிஎல் நிறுவனத்தை, கடந்த 2022- ஆம் ஆண்டு தனது மற்றொரு துணை நிறுவனமான ‘அதானி போர்ட்ஸ்’ மூலம் கைப்பற்றி, ரயில்வே துறை சார்ந்த வர்த்த கத்தை, ‘அதானி டிராக்ஸ் மேனேஜ் மெண்ட் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட்’ (Adani Tracks Management Services Pvt Ltd) என்ற நிறுவனத்தின் கீழ் கொண்டு சென்றதாகவும் அஜய்குமார் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். அதானி போர்ட்ஸ் நிறுவனத்து டன் சர்குஜா ரயில் காரிடார் பிரை வேட் லிமிடெட்டை இணைக்கும் போது, எஸ்ஆர்சிபிஎல் நிறுவனம் 450 கோடி ரூபாய் அல்லது துறை முக நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் லாபத்தில் 5 சதவிகிதம் கூடுதல் வலுசேர்க்கும் என அறிவிக்கப்பட்ட தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.