states

img

காஷ்மீரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க!

காஷ்மீரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க!

அமித் ஷாவுக்கு ஏ.ஏ.ரஹீம் எம்.பி., கடிதம்

புதுதில்லி பஹல்காமில் நடந்த பயங்கரத் வாத தாக்குதலை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் உள்ள காஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பி னர் ஏ.ஏ.ரஹீம் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,”பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் மாணவர்கள் மற்ற மாநிலங்களில் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்ற னர். குறிப்பாக உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வர்த்த கர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றிய செய்திகள் ஆபத்தானவை. டேராடூ னில் (உத்தரகண்ட்) வகுப்புவாத குழுக் களின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய விடுதிக ளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாணவர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்பு ணர்வை பரப்பி வருவதாகவும், மாணவர்களை பாதுகாக்க ஒன்றிய அரசின் அவசர தலையீடு தேவை “ என ஏ.ஏ.ரஹீம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.