states

ஆர்எஸ்எஸ் பேரணியை அனுமதிக்கக் கூடாது: மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தல்

சென்னை, நவ.4- தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி தரக்கூடாது என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மத நல்லிணக்க மரபைக் கொண்டது.  இங்கே அனைத்து மதத்தவரும் சகோதரத்துவத் துடன் வாழ்ந்து வருகிறார்கள். தனது மனுவாத, மதவெறி நோக்கிற்காக இந்த நேசத்தையும் பாசத்தையும் கெடுக்க முனைவது ஆர்எஸ்எஸ்.  பலாத்காரத்தில் நம்பிக்கை உள்ள அமைப்பு அது. அது தரும் பயிற்சியும், அது நடத்தும் பேரணியும் சிறுபான்மை மதத்தவரை மிரட்டும் வகையிலானது. இதை உணர்ந்து, அது அக்டோபர் 2 அன்று நடக்கவிருந்த பேரணிகளுக்கு அனுமதி தர மறுத்த தமிழ்நாடு அரசின் முடிவு மிகச் சரி யானது.

ஆனால், நீதிமன்றத்திற்கு சென்று நவம்பர்  6 அன்று அந்தப் பேரணியை நடத்தக் கிளம்பியிருக்கிறது ஆர்எஸ்எஸ். மாநிலத்தில் மதரீதியான பதற்றத்தை உருவாக்குவதில் அது பிடிவாதமாக உள்ளது.  இதற்கிடையில் கோவையில் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தைப் பயன்படுத்தி அந்தப் பதற்றத்தை உருவாக்க ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவாகிய பாஜக முயன்றது. ஜனநாயக சக்தி களின் எதிர்ப்பால் அது பின்வாங்க வேண்டி வந்தது.  இந்த சூழலில் ஆர்எஸ்எஸ் பேரணிகள் என்பவை அந்தப் பதற்றத்தை ஏற்படுத்தும் மற்றொரு வழி முறையாகவே இருக்கும். எனவே, அவற்றுக்கு அனுமதி தரக் கூடாது. அதற்கான சரியான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை  மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்திக் கேட்டுக்  கொள்கிறது. மேலும், மக்களின் அமைதி வாழ்வை யும், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கையும் பாதுகாக்க  வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதை மேடை சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித் திருக்கிறார்கள்.