states

img

போதைப் பொருள் கடத்தல் மையமாகிறது குஜராத்

பிரதமர் மோடியின் நண்பர் அதானி கைக்கு துறைமுகம் சென்ற பின் நாட்டில் போதைப்பொருள் கடத்தல், தயாரிப்பு, பயன்பாடு போன்றவை மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்தே அதிகளவில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்படுகிறது. அதே போல பாஜக ஆளும் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அசாம், கோவா, ஹரியா னா உள்ளிட்ட மாநிலங்களில் ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபா யில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப் பட்டு வருவது வாடிக்கையான சம்பவமாக மாறிவிட்டது. இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் குஜராத், தில்லி, பீகார் மாநிலங்களில் ரூ. 4,442 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் கடற்கரை பகுதியில் ரூ.3500 கோடி (தோராயமாக) மதிப்புள்ள 700 கிலோ போதைப் பொருளை கடற்படை பறிமுதல் செய்தது. அதே போல மோடி அரசின் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ள தில்லியில் ரூ.900 கோடி மதிப்புள்ள 80 கிலோவுக்கும் அதிகமான கோக்கை யின் போதைப்பொருளை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) பறிமுதல் செய்தது. பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் முசாபர்நகரில் ரூ.42 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். இதன்மூலம் கடந்த 48 மணிநேரத் தில் குஜராத், தில்லி, பீகார் மாநிலங்களில் ரூ.4,442 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.