states

img

போராட்டக்களத்தை விட்டு வெளியேறவில்லை : மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் மறுப்பு

புதுதில்லி, ஜூன் 05- மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் வன்முறையை ஏவிய பாஜக எம்.பி., பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி தீவிரப் போராட்டம் தொடரும் நிலையில், அதி லிருந்து பிரபல வீராங்கனை சாக்சி மாலிக் வெளியேறிவிட்டதாக பரப்பப் பட்ட செய்திக்கு, சாக்சி மாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார்.  மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வுடன் சந்திப்பு நடத்திய பிறகு போராட்டக்களத்திலிருந்து வெளியேறி யதாகவும், கிழக்கு ரயில்வே பணிக்கு திரும்பியதாகவும் திங்களன்று மதியம் பாஜக ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட, இதனை உண்மை என நம்பி அனைத்து ஊடகங்களும் வெளியிட நாடு முழுவதும் முக்கிய செய்தியாக பரவியது.

சாக்சி மாலிக் மறுப்பு

ஆனால் இந்த செய்தி போலியானது என சாக்சி மாலிக் மறுத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம். போராட்டத்தை கைவிட்டதாக வெளியான தகவல் தவ றானது. தவறான தகவலை பரப்பாதீர்கள். ரயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன்; நீதி கிடைக்கும் வரை அகிம்சை வழியில் எங்களது போராட்டம் தொடரும்” என சாக்சி மாலிக் தெரிவித்துள்ளார்.