states

img

சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு ரயில்வே அமைச்சர் குரூரமான பதில்!

புதுதில்லி, டிச.8-  நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சு. வெங்கடேசன் எம். பி மூத்த குடிமக்களுக்கான பயணச்சலுகை வழங்கப்படுமா என்று எழுப்பிய கேள்விக்கு  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கை விரித்துள்ளார்.  மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண  சலுகையை வழங்கக் கோரி நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை அளித்துள்ளதா ? எதற்  காக அச்சலுகை வழங்கப்படவில்லை? என்று  சு.வெங்கடேசன் எம்.பி  கேட்டிருந்தார். இதற்கு  டிசம்பர் 7ஆம் தேதி ரயில்வே அமைச்சர் பதில்  அளித்துள்ளார். அந்த பதிலில் 2019 - 20 ஆம்  ஆண்டில் மானியங்களுக்காக ரூ. 59837 கோடி  செலவிடப்பட்டுள்ளது. அனைத்து பயணி களுக்கும் 53 சதவீதம் தான் கட்டணம் சராசரி யாக வசூலிக்கப்படுகிறது, 47 சதவீதம் மானி யம் அளிக்கப்படுகிறது என்றும் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கு சலுகை அளிக்கப்படுகிறது என்றும் பதில் அளித்துள்ளார். 

இப்படி மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை மறுக்கப்படுவதால் அவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கிற நிலைமை எழாதா? அவர்களின் சேமிப்புகள் கரையாதா? என்ற கேள்விக்கு ரயில்வே நிறைய வகையிலான  ரயில்களை - அதாவது துரந்தோ, வந்தே பாரத், தேஜஸ், காட்டிமேன், ஹம்சபார், எக்ஸ்பிரஸ், மெயில், பாசஞ்சர் என - இயக்குகின்றன. அவற்றில் வெவ்வேறு வகுப்பு பயணங்களும் - முதல், இரண்டாம், சாதாரண வகுப்பு - உள்  ளன. ஆகவே மூத்த குடிமக்கள் அவரவர்  விரும்புகிற வகையில் பயணம் செய்து கொள்ள லாம் என்றும் பதில் தெரிவித்துள்ளார். 

ஈவிரக்கமற்றது

வெங்கடேசன் எம். பி, “இவர்கள் சொல்கிற மானிய கணக்கு பழையதுதான்; அப்போதும் மூத்த குடிமக்கள் கட்டண சலுகை வழங்கப் பட்டு வந்தது; ஆகவே மானியத்தை காரணம்  காண்பிப்பது ஏமாற்றுகிற வேலை” என்று  தெரிவித்துள்ளார். “நீங்கள் தந்து வரும் கார்ப்ப ரேட் சலுகைகளும், வரிக் குறைப்புகளும் இதைப் போல பல மடங்கு இல்லையா?” என்ற  கேள்வியை எழுப்பியுள்ளார்.  “நாடாளுமன்ற நிலைக்குழு பயணிகள் வருமானம் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் இந்த மூத்த குடிமக்கள் பயணச் சலுகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பரிந்  துரை செய்தது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல்  நவம்பர் வரை பயணிகள் வருமானம் 43 ஆயி ரத்து 300 கோடி வந்துள்ளது என்றும் இதே  காலத்தில் சென்ற ஆண்டு 24 ஆயிரத்து 600 கோடி தான் வருமானம் வந்தது என்றும்  ரயில்வே அமைச்சகம் முன்பே செய்தி வெளி யிட்டு இருந்தது. அந்த அடிப்படையில் பார்த் தால் பயணிகள் வருமானம் சென்றாண்டை விடவும் 2019 - 20ஐ விடவும் கூடுதலாக 50,000  கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கலாம். இந்த  நிலையில் நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரையையும் புறந்தள்ளி மூத்த குடி மக்களுக்கான பயண சலுகை மறுப்பது எந்த  விதத்திலும் நியாயம் இல்லை .மூத்த குடி மக்கள் மருத்துவத்திற்காகவும் சுற்றுலாவுக் காகவும் செல்லும் பயணத்திற்கு பயண சலுகை  மறுப்பது ஈவிரக்கமற்ற செயல் ஆகும்.” என்று  கூறியுள்ளார்.  

குரூரமானது 

“இதை விட ரயில்களின் பலவகை, பயண  வகுப்புகளின் பல வகைகளை சொல்லி அவற்  றில் அவரவர் தெரிவு செய்து கொள்ளட்டும் என்று கூறி இருப்பது குரூரமானது. வக்கு இருக்கிறதுக்கு தகுந்த மாதிரி போய்க் கொள், இல்லாவிட்டால் போகாமல் இரு என்று சொல்கிற தொனி அமைச்சரின் பதிலில் இருப்  பது வருந்தத்தக்கது. ஒரு நாகரிக சமூகத்தின் பண்புகளில் ஒன்று மூத்த குடிமக்களின் நலன்  பேணுவது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். கோரிக்கை வைத்தால் எள்ளி நகை யாடுவது அழகல்ல” என்றும் சு. வெங்கடேசன் கூறியுள்ளார். 

தயவில் வாழ்வதா?

“மூத்த குடிமக்கள் எந்த விதமான வருமான மும் இன்றி 78 சதமானம் பேர் தங்கள் குழந்தை களை நம்பி உள்ளார்கள் என்று தேசிய மாதிரி ஆய்வு கூறுகிறது. குழந்தைகளோ வேலை யில்லா திண்டாட்டத்தாலும்,வருமானம் குறை வான வேலையாலும், விலைவாசி உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கான இந்த பயணச் சலுகை  மறுப்பது மூத்த குடிமக்களை மேலும் உளவி யல் சிக்கல்களுக்குள் தள்ளுவதற்கே வழி வகுக்கும்.14 கோடியே 43 லட்சம் மூத்த குடிமக்  கள் நமது நாட்டில் உள்ளார்கள். இவர்களின் நலனை புறக்கணிக்கும் வகையில் ரயில்வே யின் இந்த முடிவு கடுமையான கண்டனத்திற் குரியது” என்றும் கூறியுள்ளார்.