பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தில்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு அமைப்பினரைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் காசா மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி அமைதியாக போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச் செல்லும் பொழுது பெண் ஒருவரிடம் இருந்த பாலஸ்தீனத்தின் கொடியை போலீசார் கிழித்து கீழே தூக்கி எறிந்தன. இந்த சம்பவம் வெள்ளியன்று நிகழ்ந்தது. ஊடகங்கள் இந்த சம்பவத்தை மறைத்த நிலையில், ஞாயிறன்று சமூக வலைத்தளங்கள் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.