மேற்கு வங்கத்தில் உள்ள ஜல் பைகுரியில் தேப்ராஜ் பர் மனை பிரபலமாக்குவது வேட்பாளர்களில் இளமையாக இருப் பது மட்டுமல்ல; கோவிட் பெருந்தொற்று காலத்திலும் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியபோதும் தேப்ராஜ் தலைமை யில் நடந்த செம்படையின் மீட்பு நட வடிக்கைகளும்தான். முப்பத்தாறு வயதான இந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கல்லூரி நாட்களில் இருந்தே அமைப்பு மற்றும் சமூக நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடு பட்டு வருகிறார். தேப்ராஜும் இடது முன் னணி ஊழியர்களும், நாட்டின் கம்யூ னிஸ்ட்-விவசாயி போராட்டங்களின் வர லாற்றில் சிறந்து விளங்கும் தெபாகா இயக்கத்தில் பெரும் பங்காற்றிய ஜல் பைகுரியின் மகத்தான மரபை புதுப் பிக்க கடுமையாக முயற்சிக்கின்றனர். பட்டியல் சாதி இடஒதுக்கீட்டில் உள்ள இந்த தொகுதி. ஆசைவார்த்தை கூறி ஆள்பிடிக்க முயற்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜல்பைகுரி மாவட்டச் செயலாளர் சலில் ஆச்சார்யா கூறுகையில், பாஜக, திரி ணாமுல் காங்கிரஸின் அதிகார அத்து மீறல்கள் வகுப்புவாத இயக்கங்களின் பணப்பட்டுவாடா ஆகியவற்றை முறிய டித்து இடது முன்னணி செயற்பாட்டா ளர்கள் பிரச்சாரத்தில் முன்னேறி வரு கின்றனர். கடந்த வாரம் ஒரு முக்கியமான நம் பிக்கையை அதிகரிக்கும் நிகழ்வு நடந் தது. சிபிஎம் பஞ்சாயத்து உறுப்பினரும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் சங்க ஊழியர் ரூபினா முண்டாவை வாக்குறுதிகள் அளித்து ஈர்க்க திரிணா முல் காங்கிரஸ் முயன்றது. பணமும், பதவியும்; தந்தைக்கு பதவி உயர்வும் வழங்குவதாகவும் ஆசை வார்த்தை கள் கூறினர். இதை ரூபினா பகிரங் கப்படுத்தியதையடுத்து, சிபிஎம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குறைந்த ஊதியம் - பள்ளிகள் மூடல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் எஸ்எப்ஐ அகில இந்திய பொதுச் செய லாளர் மயூக் பிஸ்வாஸ் கூறுகையில், தேயிலை தோட்டங்களில் வழங்கப் படும் குறைந்த ஊதியம்தான் தேர்த லில் முக்கியப் பிரச்சனையாக இருக் கும். ஒன்றிய, மாநில அரசுகள் தலை யிட்டு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று இடது முன்னணி கோருகிறது. இடது முன்னணி ஆட்சியின் போது ஜல்பைகுரியில் நிறுவப்பட்ட 209 பள்ளிகளை திரிணாமுல் அரசு மூடியது. அரசு வேலை பெற விரும்புவோருக் கான, ஆட்சேர்ப்பு குறைக்கப்பட்டுள் ளது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு பாஜக- திரிணாமுல் வேட்பாளர்கள் பதில் சொல்வதில்லை என்று மயூக் பிஸ்வாஸ் கூறினார். மோடியின் பத்தாண்டுகளில் டார்ஜிலிங் தேயிலை உற்பத்தி 1.1 கோடி கிலோவிலிருந்து 65 லட்சம் கிலோவாக குறைந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜியாவுல் ஆலம் தெரிவித் துள்ளார். பாஜக சார்பில் ஏற்கனவே வெற்றிபெற்ற ஜெயந்தகுமார் ராய் மீண்டும் போட்டியிடுகிறார். நிர்மல் சந் திரா திரிணாமுல் காங்கிரஸ் வேட்பா ளர். இந்தத் தொகுதியில் 1997 முதல் 2009 வரை தொடர்ச்சியாக சிபிஎம் வெற்றி பெற்றது. - சாஜன் எவ்ஜின்