states

img

மணிப்பூரில் பாஜக ஆட்சி கவிழ்கிறதா?

என்பிபி கட்சியைத் தொடர்ந்து நாகா எம்எல்ஏக்களும் விலகல்?    பாஜக எம்எல்ஏக்கள் தொடர் நெருக்கடி

பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுக ளாக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த வன் முறையில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வரு கின்றனர். இந்நிலையில், சிஆர்பிஎப் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயி ரிழப்பு, ஆயுதப்படை சிறப்பு சட்டம் அமல் மற்றும் ஜிரிபாம் ஆற்றில் பெண்கள், குழந்தைகள் என 6 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்ப வங்களால் மணிப்பூரில் மீண்டும் வன்முறை தீவிரமடைந்துள்ளது.  இதனால் இம்பால், ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஊர டங்குடன் இணையதள சேவை கள் முடக்கப்பட்டுள்ளன. முன்பு ஜம்மு-காஷ்மீரில் நிகழ்த்தியது போல மணிப்பூரின் பெரும்பாலான இடங்களில் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவும் அமலுக்கு வந்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டாலும்  மாநிலம் முழுவதும் போராட்டங்களுடன் வன்முறைச் சம்பவங்கள் மிக மோச மான அளவில் அதிகரித்து வருகின்றன. பாஜகவினர் தலைமறைவு மணிப்பூர் மாநிலத்தில் தற்போது வன்முறையோடு நிகழ்ந்து வரும் போராட்டங்கள் பாஜக அரசுக்கு எதிரானது என செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு உதாரணமாக சனியன்று மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 6 பாஜக தலைவர்களின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி, கொளுத்தினர். இந்த தாக்கு தல் சம்பவங்களால் மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர் கள், கட்சி நிர்வாகிகள் தலைமறை வாகி உள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.

20 பேர் பலி

மணிப்பூர் மாநிலத்தில் நவம் பர் 7ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நிகழ்ந்த வன்முறை சம்ப வங்களில் உயிரிழந்தோர் எண் ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஜிரிபாம் மாவட்டத் தில் 14 பேர்  உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளதாக வும் செய்திகள் வெளியாகி வரு வதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது என மணிப்பூர் காவல்துறை தகவல் தெரி வித்துள்ளது.

பாஜக ஆட்சிக்கு சிக்கல்

கடந்த வாரம் மணிப்பூர் சட்ட மன்றத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் மொத்த பலம் 53 ஆக (பாஜக - 37, என்பிபி - 7, நாகா மக்கள் முன்னணி - 5, ஐக்கிய ஜனதாதளம் - 1, சுயேச்சைகள் - 3)  இருந்தது. தற்போது வன்முறை தீவிரமடைந்துள்ளதால் மாநில பாஜக அரசிற்கு வழங்கி வந்த ஆதர வை தேசிய மக்கள் கட்சி (என்பிபி) ஞாயிறன்று வாபஸ் பெற்றது. இத னால் சட்டமன்றத்தில் மணிப்பூர் பாஜக அரசின் பலம் 46 ஆக குறைந்துள்ளது.  மேலும் வன்முறையை கட்டுப் படுத்தக் கோரியும், ஆயுத படைகள் சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 19 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யப்போவதாக முதல்வர் பைரேன் சிங்கிற்கு எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். அதே போல 5 எம்எல்ஏக்களை கொண்ட நாகா மக்கள் முன்னணியும் வன் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து வெளி யேற திட்டமிட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகி வருகின்றன. 19 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா நெருக்கடி, நாகா மக்கள் முன்ன ணியின் அடுத்தகட்ட நகர்வு நிகழ்ந்தால் சட்டமன்றத்தில் பாஜக வின் பலம் 22 ஆக குறைந்து ஆட்சி கவிழும் சூழல் ஏற்படும். இதனால் மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்களோடு, பாஜகவின் ஆட்சி கவிழும் அபாயமும் தீவிரம டைந்துள்ளது. 

என்ஐஏ மூலம்  பிரச்சனையை திசைதிருப்ப முயற்சி

மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ள சூழ லில், பாஜக ஆட்சிக்கும் சிக்கல் முளைத்துள்ளது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் அசாதாரண நிலைமையை திசை திருப்ப மோடி அரசு தேசிய புல னாய்வு முகமையை (என்ஐஏ) மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள் ளது. இம்பால், ஜிரிபாம் மாவட் டங்களில் நிகழ்ந்த வன்முறைக்கு வெளியாட்கள் தான் காரணம் எனக் கூறி வன்முறை தொடர்பான 3 வழக்குகளில் என்ஐஏ விசார ணையை தொடங்கியுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின்பேரில்  சிஆர்பிஎப் - குக்கி பழங்குடி மக்கள் மோதல் உள்ளிட்ட வழக்குகளில் என்ஐஏ விசாரணையை தொடங்கி யுள்ளது.