தலித் இளைஞர்களை மொட்டையடித்து, நிர்வாணமாக்கி தாக்குதல்
இந்துத்துவா குண்டர்கள் அட்டூழியம்
பாஜக ஆளும் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில், இரண்டு தலித் இளை ஞர்கள் பசு கடத்தியதாகப் பொய்ப் புகார் கூறி, இந்துத்துவா கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்காக மாடுகளை வரதட்ச ணையாக கொண்டு சென்ற தலித் இளை ஞர்களை வழிமறித்த கும்பல், அவர்களி டம் பணம் கேட்டு மிரட்டியுள்ளது. பணம் தர மறுத்ததால் இருவரை யும் அரைநிர்வாணமாக்கி, மொட்டைய டித்து, கயிற்றால் கட்டி, சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையில் தரதரவென இழுத்துச் சென்றும், ஊர்ந்து செல்ல வைத்தும் இந்துத்துவா கும்பல் சித்ரவதை செய்துள்ளனர். மேலும், மாடுகளுக்கு உணவாக கொடுக் கும் புல்லைத் தின்ன வைத்தும், சாக்கடை நீரைக் குடிக்க வைத்தும் அவமானப்படுத்தியுள்ளனர். படுகாயமடைந்த தலித் இளை ஞர்கள், கும்பலிடமிருந்து தப்பித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தற்போது பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொ டர்பாகக் காவல்துறையினர் 6 பேரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வரு வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கொடூர சம்பவத்திற்கு மக்க ளவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.