states

கர்நாடகாவில் தந்தையே மகளைத் தண்ணீரில் தள்ளி ஆணவக் கொலை!

பெங்களூரு, நவ. 10 வேறு சாதி இளைஞனை காதலித்த தனது மகளை தந்தையே தண்ணீரில் தள்ளி மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.  கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் குடிதினி கிராமத்தை சேர்ந்த வர் ஓம்கார் கவுடா (45). இவரது மகள் ககன ஸ்ரீ (15). இவர், கடந்த ஓராண்டாக வேறு சாதியைச் சேர்ந்த இளைஞ னோடு பழகி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது ஓம்கார் கவுடாவுக்கு பிடிக்கவில்லை என்பதால் மகளைக் கண்டித்துள்ளார். எனினும், ககனஸ்ரீ,  தனது மனதுக்குப் பிடித்த இளைஞ னோடு பழக்கத்தைத் தொடர்ந்துள்ளார். இந்நிலையில், ஓம்கார் கவுடா, கடந்த அக்டோபர் 31 அன்று மகளுக்கு  நகை வாங்கித் தருவதாக அருகிலுள்ள  டவுனுக்கு அழைத்துச் சென்றுள் ளார். அங்கு கடைகளில் நகைகளை பார்த்த பிறகு தனது மகளை தியேட்ட ருக்கு அழைத்துச் சென்று திரைப்படம் பார்த்துள்ளார்.

பின்பு கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  பின்னர் கோயிலிலிருந்து நள்ளிர வில் வீட்டுக்கு அழைத்துவரும் வழி யில், குருகோடு அருகே துங்கபத்ரா நதி கால்வாய் ஓரமாக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கால்வாய் ஓரத்தில் உட்கார்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிரு, நான் இயற்கை உபாதைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் எதிர்பாராத நேரத்தில், கரையில் உட்கார்ந்திருந்த மகள் ககனஸ்ரீயை பின்புறமாக வந்து கால்வாய்க்குள் தள்ளிவிட்டுள்ளார். ககனஸ்ரீ தன்னை காப்பாற்றும்படி தந்தையிடம் கதறிய போதும் ஈவிரக்க மின்றி தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து பெல்லாரி நகருக்கு சென்று, பின்னர் அங்கிருந்து பேருந்து மூலமாக திருப்பதி சென்று தலைமறைவாகியுள்ளார்.  தற்போது 10 நாட்களுக்குப் பிறகு, ஓம்கார் கவுடா நவம்பர் 8-ஆம்  தேதி கொப்பலில் கைது செய்யப் பட்டுள்ளார். அவர் கொலையை ஒப்புக் கொண்டுள்ளார். அதன்பேரில் ஓம்கார்  கவுடா மற்றும் கொலையில் அவருக்கு உதவிய நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், சிறுமி ககனஸ்ரீ-யின் உடல் இன்னும் மீட்கப்பட வில்லை. கொலை செய்வதற்கு முன்,  ஓம்கார் கவுடா தனது மகளின் கணக்கில் வைத்திருந்த ரூ. 20 லட்சத்தை  தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.