பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதி ராக நாளுக்குநாள் குற்றச்சம்ப வங்கள் அதிகரித்து வருன்றன. இந்நிலையில், கடந்த சனியன்று நாட்டின் பிரபல சுற்றுலாத்தல நக ரான ஆக்ராவின் “ஹோம்ஸ்டே ஹோட்டலில்” 25 வயதுமிக்க இளம் பெண் ஒருவர் நான்கு பேரால் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கதறும் வீடியோ இதுதொடர்பாக வெளியாகி யுள்ள வீடியோவில் ஓர் இளம் பெண்ணை 4 பேர் கொண்ட கும் பல் கட்டாயப்படுத்தி மது அருந்த வைக்க முயற்சிக்கிறது. மறுக் கவே அக்கும்பல் இளம்பெண் ணின் தலையில் மது பாட்டிலால் அடித்துள்ளது. வலியால் அலறித் துடிக்கும் அந்த இளம்பெண் ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயல்கிறது 4 பேர் கொண்ட கும்பல். தனக்கு சிறிய மகள்கள் இருப்பதாக இளம் பெண் கதறி அழுது கெஞ்சு கிறார். அதன்பின், அடித்து உதைத்து ஈவிரக்கமின்றி 4 பேரும் இளம்பெண்ணை பாலி யல் பலாத்காரம் செய்துள்ள னர். தாங்கள் எடுத்த வீடியோ வை அந்த இளம்பெண்ணிடம் காண்பித்து இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் அடுத்த நிமிடமே போலீசாருக்கு தகவல் தெரி விக்க, இளம் பெண்ணை கும்பல் வன்கொடுமை செய்த 4 பேர் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண் ஒருவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பாலி யல் வன்கொடுமையால் பாதிக் கப்பட்ட இளம்பெண் ஆக்ரா நகர மருத்துவமனையில் சிகிச் சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் நடந்த ஹோம்ஸ்டே சீல் வைக்கப்பட் டுள்ளதாக ஆக்ரா காவல் உதவி ஆணையர் (ஏசிபி) சதர் அர்ச் சனா சிங் தெரிவித்தார்.