states

img

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி

தென் இந்தியாவில் தொகுதிகள் குறைப்பதாக கூறப்படும் விவகாரத்தில் அமித் ஷாவிடம் மறைக்க எதுவும் இல்லையென்றால், ஒன்றிய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி அவர்கள் என்ன செய்ய முன்மொழிகிறார்கள் என்று ஏன் கூறவில்லை? அவர்கள் கவலைகளை எவ்வாறு நிவர்த்தி செய்ய விரும்புகிறார்கள் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் 2 முக்கிய பதவிகள் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளன. அரசியலமைப்பு சட்டப்படி அமைந்த  ஆணையத்தை வலுவிழக்கச் செய்வது, அரசியலமைப்பு மீதான நேரடி தாக்குதலாகும். தலித்துகளுக்கு எதிரானது ஒன்றிய பாஜக அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.

பிஆர்எஸ் தலைவர் கே.டி.ராமாராவ்

நாட்டின் மக்கள் தொகையில் 19% மட்டுமே உள்ள தென் இந்தியாவின் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36% ஆகும். ஆனால் வெற்றிகரமான மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்காக தொகுதி குறைப்பு என்ற பெயரில் தென் இந்தியாவை தண்டிப்பது அபத்தமானது. தொகுதி குறைப்பு என்பது தென் மாநிலங்களை ஓரங்கட்டுவதற்கான முயற்சி ஆகும்.

திரைக்கலைஞர் பிரீத்தி ஜிந்தா

பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொள்வதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.  மற்றொருவர் செய்யும் செயலுக்கு ராகுல் காந்தி எப்படி பொறுப்பாவார். ராகுல் காந்தியுடனும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எனவே அவரை நிம்மதியாக வாழ விடுங்கள்; நானும் நிம்மதியாக வாழ்கிறேன்.