சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி
மோடி அரசு அரசியல் கட்சி பிரதிநிதிகளைக் கொண்ட குழுக்களை வெளிநாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், முதலில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும். அதே போல பயங்கரவாதம் குறித்த செய்தியை முதலில் இந்திய மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத்
பேராசிரியர் ராம் கோபால் அவர்கள் இந்தியாவில் சகோதரத்துவத்தை வளர்க்கும் எண்ணம், சிந்தனை மற்றும் மனப்பாங்கு மட்டுமே அவரது கொள்கை. அவர் தீங்கு விளைவிக்கும் விதமாக எந்தவொரு அவதூறான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவர் டேனிஷ் அலி
வெளிநாட்டிற்கு எம்.பி.,க்கள் குழுவை பிரதமர் மோடி அனுப்புகிறார். அவரது முயற்சியை பாராட்ட வேண்டும். ஆனால் முதலில் மோடி எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாமல் ஏன் மறைந்து கொள்கிறார்? போர் நிறுத்தத்தின் போது டிரம்ப் உடன் எந்த வகையான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது? இதற்கு மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.
திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ்
ராணுவ உடையை மோடி உடுத்தியிருப்பது போல பாஜகவினர் கட் அவுட் வைத்துள்ளனர். நிர்வாண பேரரசர், உடையை கடன் வாங்கியிருக்கிறார். பாஜகவுக்கு வெட்கமே கிடையாதா?