states

img

ஒரே நாளில் 2.68 லட்சம் பேருக்கு கொரோனா

நாட்டில் ஒரே  நாளில் 2.68 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலையுடன் நிறைவு பெற்ற கடந்த 24 மணிநேரத்தில் 2,68,833 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 402 பேர் பலியாகினர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,85,752 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் நேற்று 1,22,684 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 14,17,820 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிக்கப்படும் விகிதம் 16.66 சதவிகிதமாக உள்ளது.
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,041-ஆக அதிகரித்துள்ளது.